பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்317

2-ம் தோழி அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின்
 15‘அப்படி அரசன் மீண்டான்.’ செப்பாய்!
முதற்றோழி எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு.
அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்!
மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம்
தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும்
 20அருகுள செவிலியும் யானுமாய் விரைவில்
தாங்கினோம் பாங்குள அமளியிற் சேர்த்தோம்.
மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை.
இட்டகை இட்டகால் இட்டவப் படியே.
இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்!
 25தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி
ஏங்கினோம், தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம்.
2-ம் தோழி ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர்
பட்டபா டெதுவோ!கட்டம்! கட்டம்!
முதற்றோழி விதியிது! அலதிது கதையிலும் உளதோ?
 30நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி.
தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து
மகிழ்ச்சி காட்டினான். வந்ததித் தளர்ச்சி.
மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்.
2-ம் தோழி எத்தனை வேதனை! எத்தனை சோதனை!
 35யாது மறியாட் கேதித் துணிபு?
ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும்
நவிலுதி அக்காள்!
முதற்றோழி:  நங்கைநன் மொழியென்
   செவியிடை இனியும் மணிபோல் திகழும்!


பாங்குஉள - பக்கத்தில் உள்ள, அமளி - படுக்கை, தத்து - விபத்து.