இடம் : கன்னிமாடத் தொருசார்.
காலம் : யாமம்.
கிழவி: | | எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும் ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில். |
முதற்றோழி | | என்னடி கிழவி சொன்னால் அறிகிலை. போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்! |
| 5 | மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ! மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி? காது மில்லை! கண்ணு மில்லை! ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ! |
கிழவி: | | கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு! |
| 10 | படும்போ தறிவை!இப் படியே பண்டு முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன் |
| | ஓடினோம்... |
முதற்றோழி | | போடீ! உன்கதை அறிவோம் |
| | (கிழவி போக) |
| | சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே! |
| | (நகைக்க) |
குளிகை - மாத்திரை.