பக்கம் எண் :

316மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

இரண்டாம் களம்

இடம் : கன்னிமாடத் தொருசார்.

காலம் : யாமம்.

(சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

கிழவி: எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும்
ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.
முதற்றோழி என்னடி கிழவி சொன்னால் அறிகிலை.
போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்!
  5மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ!
மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி?
காது மில்லை! கண்ணு மில்லை!
ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ!
கிழவி: கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!
 10படும்போ தறிவை!இப் படியே பண்டு
முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன்
  ஓடினோம்...
முதற்றோழி போடீ! உன்கதை அறிவோம்
  (கிழவி போக)
  சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே!
   (நகைக்க)


குளிகை - மாத்திரை.