பக்கம் எண் :

336மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென
உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்--விள்ளா
மணியின தொளியும் மலரது மணமும்
அணிபெறு மொழியின் அருத்தமும் போல,
அந்நிசி யாகவெஞ் ஞான்றும்
மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!
(யாவரும் வாழ்த்த)

ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன்
குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கைகண்டீர்
அறிவோம் எனுநம் அகங்கரம் ஆறும் அவத்தையினிற்
செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படும் சீரிதுவே.

ஐந்தாம் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா 6 -க்கு அடி 569
வெண்செந்துறை 6 -க்கு அடி 12
கொச்சகக் கலிப்பா 3 -க்கு அடி 12
மருட்பா 1 -க்கு அடி 6
ஆக அங்கம் 1-க்குப் பா. 16 -க்கு அடி 599


விள்ளா - விண்டுபோகாத, விட்டுப் பிரியாத. அருத்தம் - பொருள்.

கையற்ற - செயல்அற்ற. குறி - அடையாளம். அவத்தை - நிலைமை. செறிவாய் - நெருக்கமாய். திருக்கு - குற்றம். இக்கலித்துறை, தன் சுதந்தரம் விட்டு அருள்வழி நின்ற போதம் அதீதப்படும் முறையைக் கூறுகின்றது.