336 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்--விள்ளா மணியின தொளியும் மலரது மணமும் அணிபெறு மொழியின் அருத்தமும் போல, அந்நிசி யாகவெஞ் ஞான்றும் மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே! | (யாவரும் வாழ்த்த) |
ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன் குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கைகண்டீர் அறிவோம் எனுநம் அகங்கரம் ஆறும் அவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படும் சீரிதுவே. |
ஐந்தாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா | 6 -க்கு அடி 569 | வெண்செந்துறை | 6 -க்கு அடி 12 | கொச்சகக் கலிப்பா | 3 -க்கு அடி 12 | மருட்பா | 1 -க்கு அடி 6 | ஆக அங்கம் 1-க்குப் பா. | 16 -க்கு அடி 599 |
விள்ளா - விண்டுபோகாத, விட்டுப் பிரியாத. அருத்தம் - பொருள். கையற்ற - செயல்அற்ற. குறி - அடையாளம். அவத்தை - நிலைமை. செறிவாய் - நெருக்கமாய். திருக்கு - குற்றம். இக்கலித்துறை, தன் சுதந்தரம் விட்டு அருள்வழி நின்ற போதம் அதீதப்படும் முறையைக் கூறுகின்றது. |