| | எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். |
| 215 | பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன். விடைகொடு நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே. |
ஜீவ: | | உண்மையோ? குடிலா! உரையாய்! |
| | (குடிலன் முகங் கவிழ்த்து நிற்க) |
நாரா: | | இதுவுநின் |
| 220 | உண்மையோ! மௌனமேன்? |
யாவ: | | ஓகோ! பாவி! |
நாரா: | | படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! |
சுந்: | | விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின். வாராய் ஜீவக! பாராய் உன்மகள் |
| 225 | தாராத் தன்னிரு கைதோள் சூட்டி எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. இருமனம் ஏனினி; என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே. |
ஜீவ: | | கண்மணீ! அதற்குட் கண்வளர்ந் தனையோ! |
| 230 | உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை! |
| | (மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க) |
| | வெருவலை! மணியே! பிரியீர் இனியே! 3 |
நண்ணவும் - அடையவும். வேட்டையேல் - விரும்புவாயானால். ஞாட்பிடை - போர்க்களத்தில். தாரா - மாலையாக. எண்படு - கருதப்படும். கண்படு - துயில்கின்ற. இறும்பூது - வியப்பு, ஆச்சரியம். வெருவலை - அஞ்சாதே.