பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்335

   எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை
நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன்.
 215பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை
யாதே ஆயினும் ஆகுக. ஈதோ!
மீள்குவன். விடைகொடு நாளையும்
வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே.
ஜீவ: உண்மையோ? குடிலா! உரையாய்!
  (குடிலன் முகங் கவிழ்த்து நிற்க)
நாரா: இதுவுநின்
 220உண்மையோ! மௌனமேன்?
யாவ:  ஓகோ! பாவி!
நாரா: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்!
சுந்: விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்!
நன்மையே யாவும் நன்மையாய் முடியின்.
வாராய் ஜீவக! பாராய் உன்மகள்
 225தாராத் தன்னிரு கைதோள் சூட்டி
எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை.
இருமனம் ஏனினி; என்றுமிப் படியே
மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே.
ஜீவ: கண்மணீ! அதற்குட் கண்வளர்ந் தனையோ!
 230உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல்
என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும்
ஒருவரை ஒருவர் உணர்ந்தமை!
  (மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க)
  வெருவலை! மணியே! பிரியீர் இனியே!      3


நண்ணவும் - அடையவும். வேட்டையேல் - விரும்புவாயானால். ஞாட்பிடை - போர்க்களத்தில். தாரா - மாலையாக. எண்படு - கருதப்படும். கண்படு - துயில்கின்ற. இறும்பூது - வியப்பு, ஆச்சரியம். வெருவலை - அஞ்சாதே.