பக்கம் எண் :

334மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  (யாவரும் புருடோத்தமனைச் சூழ:
  சுந்தரர் கூட்டம் விலக்க.)
சுந்:  நின்மின்! நின்மின்!
  (அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர)
அருள்வரதன்:   
   அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்!
  (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து
நின்று காக்க)
யாவ: படையுடன் பாதகன்!
   (பின்னிட)
அருள்: (விலங்குடன் குடிலனைக் காட்டி)
  பாதகன் ஈங்குளான்.
ஜீவ: குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ!
அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி!
 200அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்!
சுந்: பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில்.
புரு: வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல்
அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை.
சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங்
 205கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர.
உன்னர சுரிமையும் உன்னகர் நாடும்
என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா!
ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன்
சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட
 210எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும்
பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும்
தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும்


வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்ய மாட்டான். தெருட்ட - தெளிவுபடுத்த. வந்துழி - வந்தபோது.