| | (யாவரும் புருடோத்தமனைச் சூழ: |
| | சுந்தரர் கூட்டம் விலக்க.) |
சுந்: | | நின்மின்! நின்மின்! |
| | (அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர) |
அருள்வரதன்: | | |
| | அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! |
| | (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து நின்று காக்க) |
யாவ: | | படையுடன் பாதகன்! |
| | (பின்னிட) |
அருள்: | | (விலங்குடன் குடிலனைக் காட்டி) |
| | பாதகன் ஈங்குளான். |
ஜீவ: | | குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி! |
| 200 | அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்! |
சுந்: | | பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில். |
புரு: | | வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங் |
| 205 | கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா! ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட |
| 210 | எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும் தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும் |
வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்ய மாட்டான். தெருட்ட - தெளிவுபடுத்த. வந்துழி - வந்தபோது.