பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்333

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

சுந்: எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை?
மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம்
யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணீ!
 180வருதி இப்புறம். வாங்குதி மாலை.
  (மனோன்மணி மணமாலைகொண்டு
பலதேவனெதிர் வர)
  ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம்.
உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன்.
  (புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க)
முதற்படை ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம்.
3-ம் படை: ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண்.
4-ம் படை: அமையா நோக்கமும் இமையா நாட்டமும்,
ஏங்கிய முகமும் நீங்கிய இதழும்,
உயிரிலா நிலையும் உணர்விலா நடையும்
பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்!
  (மனோன்மணி புருடோத்தமனைக் காண:
உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க)
யாவ: எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்?
புரு: 190 இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே!
  (புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க)
சுந்: மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே!
யாவ: சோரன்! சோரன்! சோரன்! சோரன்!
நிஷ்டாபரர் கண்டேன்! கண்டேன்! கருணா கரரே!
  (கருணாகரரைத் தழுவி)
யாவ: பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்!
பலதே: 195கொன்மின்! கொன்மின்!