46 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின் மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம் வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு ஒள்ளிய சிறுவிர லணியாக் கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே. -ஆசிரியச் சுரிதகம் அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல் (நேரிசை வெண்பா) அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய் -- நமையுமிந்த நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய ஆடுவம்வா நாணம் அவம். பாயிரம் முற்றிற்று. | | வெண்பா | 2-க்கு அடி | 8 | | | கலிப்பா | 1-க்கு அடி | 49 | | | ஆகப் பாயிரம் | 1-க்கு அடி | 57 |
பழைய ஏட்டுச் சுவடிகள் முதன்முதல் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. இதைத்தான் பழம்பணி புதுக்கி என்று கூறினார். குயிற்றுதல் - செய்தல். மீக்கொள - மேற்கொள்ள. இந் நாடகம் - இந்த மனோன்மணீயம் என்னும் நாடகம். சிறுவிரல் - தமிழ்த் தெய்வமாகிய உன் சிறுவிரல். கொள்மதி - கொள்க. அமைய - பொருத்த, அருள் - தெய்வத் திருவருள், ஆட்டுமேல் - ஆட்டுவிக்குமானால். சுமை பொறுப்பது - பாரந் தாங்குவது, எவன் - என்ன காரணம். நமையும் - நம்மையும். நயந்தால் - (திருவருள்) விரும்பினால். அவன் - வீண். |