54 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
மனோன்மணீயம் முதல் அங்கம் முதற் களம் இடம் :பாண்டியன் கொலுமண்டபம். காலம் :காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன் : | | | | | புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே. | 2-ம் சே: | | அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? | 3-ம் சே: | | ஈதோ! நோக்குதி. | 4-ம் சே: | 5 | அவ்விடத் திருப்பதென்? | 5-ம் சே: | | ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் | | 10 | ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’ எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! |
சிங்காதனம் - சிங்காசனம். திகழ்தர - விளங்க. அடியினை - இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை - கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர். |