2-ம் சே: | | முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! |
4-ம் சே: | | எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்! எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! |
3-ம் சே: | 15 | உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம். |
முதற் சே: | | அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்! |
| | (ஜீவகன் வர) |
யாவரும்: (தொழுது) | |
| | ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!! |
| | (சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர) |
| | ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! |
ஜீவகன்: | 20 | வருக! வருக! குருகிரு பாநிதே!! திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து
|
| 25 | இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன் |
| | (ஜீவகன் பாதபூசை செய்ய) |
சுந்தரமுனிவர் : |
| | வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி? |
ஜீவ: | | சுகம். சுகம். |
சுந்: | 30 | இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்? |
ஜீவ: | | உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம். |
ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.