58 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| 80 | உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும். வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும் பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு மெண்ணில: | சுந்: | (எழுந்து) | | | சம்போ!சங்கர! அம்பிகா பதேஎ! | | 85 | நன்று மன்னவ! உன்றன் றொல்குலங் காக்கநீ யாக்கிய இவையெல்லாம் கண்டுளேம். அல்லா துறுதி யுவதோ? சொல்லுதி! | ஜீவ: | | என்னை! என்னை! எமக்கருள் குரவ! இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர் | | 90 | வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக் கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ? ஆயினும் அரணி லுளபுரை நோக்கி நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே. | சுந்: | | காலம் என்பது கறங்குபோற் சுழன்று | | 95 | மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை. வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம், ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி வாயிலு மாமென வையகம் புகலும். |
உவாமதி - முழுநிலா. மாசு - களங்கம். 79, 80 - ஆம் அடிகள் மீன் உருவம் எழுதப்பட்ட பாண்டியனுடைய கொடி காற்றில் அசைந்தாடுவது, முழு நிலாவினுடைய களங்கத்தை நக்குவது போலிருக்கிறது என்னும் கருத்துள்ளது. மீன்கள் பாசி முதலிய அழுக்கைத் தின்பது இயல் பாகலின், நிலாவில் உள்ள களங்கத்தை நக்குவதுபோலிருக்கிறது என்று கூறினார். எயிலினம் - கோட்டையின் மதில், கொத்தளம் முதலியவை. எந்திரப் படை, தந்திரக் கருவி, பொறிகள் - பகைவர் போருக்கு வந்தால் அவர்களை எதிர்ப்பதற்காகக் கோட்டைச் சுவர்களின்மேல் அமைக்கப்படும் போர்க்கருவிகள். கிறிகள் - வஞ்சக வழிகள், துன்னலர் - பகைவர். வெருவுவர் - அஞ்சுவார்கள். பொருது - போர்செய்து, அரண்கோட்டை. புரை - குற்றம்; பலவினம். முனமுனம் - முதன் முதலில். ஆயற்பாற்று -ஆராயத்தக்கது. |