| 100 | உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் |
| 105 | கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். |
ஜீவ: | | ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே. |
| | (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) |
குடி: | (தனதுள்) | |
| | நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல! |
| | (சேவகனை நோக்கி) |
| 110 | சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி. |
சேவ: | | சுவாமி! |
| | (குடிலன் முதலியோர்போக) |
முதல் நகரவாசி: | | |
| | கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? |
2-ம் ந: | 115 | கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய். |
3-ம் ந: | | குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே. |
திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து.