சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கொண்டவன் | கணவன் . |
கொண்டாட்டக்காரன் | உற்சாகமுள்ளவன் ; தோழன் . |
கொண்டாட்டம் | பாராட்டுதல் ; மகிழ்ச்சி ; திருவிழா முதலிய சிறப்புகள் . |
கொண்டாட்டு | சீராட்டு ; பாராட்டல் . |
கொண்டாடுதல் | கூடிக்குலாவுதல் ; மெச்சுதல் ; பாராட்டுதல் ; திருவிழா முதலியன கொண்டாடுதல் . |
கொடும்பு | சிம்பு ; தவிட்டுப்பொடி ; கொடுமை . |
கொடும்புரி | கொடுமுறுக்கு ; கடுஞ்சூழ்ச்சி . |
கொடும்புலி | சிங்கம் ; சிங்கராசி . |
கொடும்பை | நீர் அருவி ; குன்றம் ; குளம் ; தூம்பு ; தாம்பு ; பச்சிலைப் பூண்டுவகை ; கொடும்பாளுர் . |
கொடுமடி | பண்டம் இடுதற்கு வளைத்துக் கட்டிய மடி . |
கொடுமரம் | வில் ; தனுராசி ; ஏணிப்பழு . |
கொடுமலையாளம் | அரிதிற் பொருள்படும் மலையாள மொழிவகை ; கொடுமலையாளம் பேசும் மலைநாட்டு பகுதி . |
கொடுமுடி | மலையினுச்சி ; கோபுரத்தினுச்சி ; உப்பரிகை ; பாண்டிக் கொடுமுடி . |
கொடுமுடிச்சு | அவிழ்க்க இயலாத முடிச்சு ; கேடு சூழும் சூழ்ச்சி . |
கொடுமுறுக்கு | நூலில் ஏறிய அதிக முறுக்கு . |
கொடுமூலை | எளிதில் அறிந்து செல்ல முடியாத மூலையிடம் . |
கொடுமை | கடுமை ; முருட்டுத்தன்மை ; தீமை ; வளைவு ; மனக்கோடடம் ; அநீதி ; பாவம் ; வேண்டாத சொல் . |
கொடுமைசொல்லுதல் | கடுமையான சொல்லால் பேசுதல் . |
கொடுமைத்தானம் | இலக்கினத்திற்கு எட்டாமிடம் . |
கொடுவரி | புலி . |
கொடுவருதல் | கொண்டுவருதல் . |
கொடுவாய் | வாள் முதலியவற்றின் வளைந்த வாய் ; குறளை ; பழிச்சொல் ; ஒரு மீன் வகை ; புலிவகை ; வாயினின்று வடியும் நீர் . |
கொடுவாயிரும்பு | தூண்டில் முதலியவற்றிலுள்ள இரும்புக் கொக்கி . |
கொடுவாள் | வளைந்த வாள் ; அறுவாள் ; மழு . |
கொடுவினை | முற்பிறப்பிற் செய்த தீவினை . |
கொடுவேலி | காண்க : கொடிவேலி . |
கொடுவை | முருட்டுதனம் ; துட்டத்தனம் . |
கொடூரம் | கொடுமை ; குரூரம் . |
கொடை | ஈகம் , தியாகம் , ஈகை ; உதவிப்பொருள் ; கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை ; ஊர்த்தேவதைக்கு மூன்றுநாள் செய்யும் திருவிழா ; வசவு ; அடி . |
கொடைக்கடம் | கொடையாகிய கடமை . |
கொடைக்கை | கொடைகொடுக்கும் கை ; வீட்டின் முகடு . |
கொடைநேர்தல் | மகளை மணஞ் செய்து கொடுக்க உடன்படுதல் ; தேவதைக்கு விழாச் செய்யத் தீர்மானித்தல் . |
கொடைமடம் | அளவின்றிக் கொடுத்தல் . |
கொடைமுடி | சரக்கொன்றை . |
கொடைமை | கொடைத்தொழில் . |
கொடையாளன் | ஈகையாளன் . |
கொடையாளி | ஈகையாளன் . |
கொடையெதிர்தல் | கொடுத்தலை மேற்கொள்ளுதல் ; கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளுதல் . |
கொடையோன் | ஈகையுள்ளவன் . |
கொடைவஞ்சி | போரில் வென்று கொண்ட பொருளைப் பாடிய பாணர்க்கு அரசன் பரிசாக அளிப்பதைக் கூறும் புறத்துறை . |
கொடைவள்ளல் | அளவில்லாமற் பொருளைக் கொடுப்பவன் . |
கொடைவினா | வினாவகையுள் ஒன்று , கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா . |
கொடைவீரம் | பிறருக்குத் தன்னை அளித்தல் . |
கொண்கன் | கணவன் ; நெய்தல்நிலத்தலைவன் . |
கொண்கானம் | கொங்கண நாட்டிலுள்ள மலை . |
கொண்ட | ஓர் உவமச்சொல் . |
கொண்டக்காரன் | மீன்பிடிப்போருள் ஒரு வகுப்பினன் . |
கொண்டக்கிரி | ஒரு பண்வகை . |
கொண்டகுளம் | எட்டிமரம் . |
கொண்டங்கட்டிப் பாய்ச்சுதல் | அணைகட்டி மேட்டுநிலத்தில் நீர் பாய்ச்சுதல் . |
கொண்டச்சாணி | நஞ்சறுப்பான் பூண்டு . |
கொண்டம் | குறிஞ்சாக்கொடி ; நீர் பாய்ச்சுவதற்குத் தேக்கிய நீர்நிலை . |
கொண்டல் | கொள்ளுதல் ; மேகம் ; காற்று ; கீழ்காற்று ; கிழக்கு ; மேடராசி ; கொண்டற்கல் ; மகளிர் விளையாட்டுவகை . |
கொண்டல்வண்ணன் | மேக நிறமுடைய திருமால் . |
கொண்டலாத்தி | ஒரு குருவிவகை . |
கொடுந்தமிழ்நாடு | கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி , குட்டம் , குடம் , கற்கா , வேணாடு , பூழி , பன்றி ; அருவா , அருவா வடதலை , சீதம் , மலாடு , புனனாடு என்னும் பன்னிரு நிலங்கள் . |
கொடந்தறி | வளைந்த முளைக்கோல் . |
கொடுந்துயர் | மிக்க துயரம் ; சாவு . |
கொடுந்தொழிலாளன் | கொடுஞ் செய்கையுள்ளவன் ; யமன் . |
கொடுநாக்கு | தீய நாக்கு . |
கொடுநாக்கெறிதல் | விருப்பக் குறிதோன்ற நாவால் வாய்ப்புறத்தைத் துழாவுதல் . |
கொடுநுகம் | நுகத்தடி ; கலப்பை ; மகநாள் . |
கொடுப்பனை | கொடுப்புவினை என்பதன் மரூவு ; பெண்ணை மணஞ்செய்து தருதல் . |
கொடுப்பினை | கொடுப்புவினை என்பதன் மரூவு ; பெண்ணை மணஞ்செய்து தருதல் . |
கொடுப்பு | கொடுக்கை ; விளையாட்டாக அடிக்கை ; கதுப்பு . |
கொடுப்புப்பல் | கடைவாய்ப்பல் . |
கொடுப்பை | பொன்னாங்காணிக்கீரை . |
கொடுபடுதல் | கடன் முதலியன செலுத்தப்படுதல் . |
கொடுபோதல் | கொண்டுசெல்லுதல் . |
கொடும்பகல் | நண்பகல் . |
கொடும்பனிக்காலம் | பனி மிகுந்துள்ள மாசி பங்குனி மாதங்கள் . |
கொடும்பாடன் | கொடியன் , மிகுந்த தீவினையாளன் . |
கொடும்பாடு | கொடுமைப்பாடு ; மாறுபாடு . |
கொடும்பாவி | பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம் ; தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை . |
கொடும்பாவை | பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம் ; தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை . |
![]() |
![]() |
![]() |