சொல்
|
அருஞ்சொற்பொருள் |
செந்துருக்கம் | ஒரு செடிவகை . |
செந்துருத்தி | செம்பாலைப் பண்களுள் ஒன்று . |
செந்துருதி | குறுஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று . |
செந்துளிர் | செந்நிறத் தளிர் . |
செந்துறை | பாடற்கேற்ற பாட்டு . |
செந்தூக்கு | நேராகத் தூக்குகை ; செங்குத்து ; தாளவகை : ஒருபாட்டுவகை . |
செந்தூரத்தாசி | கந்தகம் . |
செந்தூரம் | சிவந்த பொடி . |
செந்தூள் | போர்க்களத்து இரத்தமயமானதுகள் . |
செந்தூள்கருந்தூள் பறத்தல் | சண்டை முதலியவற்றின் கடுமையை உணர்த்தும் குறிப்பு . |
செந்தேன் | உயர்ந்த தேன் ; அறுவைப் புகைக்கும் நறுமணப்பொருள்களுள் ஒன்று . |
செந்தொட்டி | காஞ்சொறிக்கொடி . |
செந்தொடை | சிவந்த மாலை ; மோனை எதுகை முதலியன அமைக்கப்படாத பாட்டு ; அம்பு முதலியவற்றை எய்யும் குறி . |
செந்தொடையன் | செந்நிறப் பூமாலையை அணிந்தவனான வயிரவன் . |
செந்தோன்றி | காண்க : செங்கழுநீர் ; காந்தள் . |
செந்நகரை | ஒரு மரவகை ; ஒரு கடல்மீன்வகை . |
செந்நாகம் | செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை ; கேது . |
செந்நாடிக்கா | மூக்கிரட்டைக்கொடி . |
செந்நாப்போதர் | திருவள்ளுவர் . |
செந்நாயுருவி | ஒரு நாயுருவிச்செடிவகை . |
செந்நிலம் | செந்தரை ; போர்க்களம் . |
செந்நிலை | கூத்துநிலைவகை . |
செந்நிறக்கல் | மாமிசச்சிலை . |
செந்நிறுவுதல் | நேர்வழியில் நிறுத்துதல் . |
செந்நீர் | இரத்தம் ; புதுவெள்ளம் ; தெளிந்த நீர் ; சுரோணிதம் ; சாயச்சரக்கு . |
செந்நீர்ப்பவளம் | சிவந்த பவளம் . |
செந்நீர்முத்து | செந்நீரோட்டமுள்ள முத்து . |
செந்நெல் | செஞ்சாலிநெல் ; நன்னீர் மீன்வகை . |
செந்நெறி | நல்வழி ; சன்மார்க்கம் . |
செப்பஞ்செய்தல் | ஒழுங்குபடுத்துதல் ; புதைத்தல் . |
செப்பட்டை | பறவைச் சிறகு ; தோட்பட்டை ; தூண்டியில் வைக்குஞ் சதுரக்கல் ; கன்னம் . |
செப்பட | செவ்விதாக . |
செப்படி | காண்க : செப்படிவித்தை . |
செப்படித்தல் | செப்படிவித்தை செய்தல் . |
செப்படிவித்தை | செப்பைக்கொண்டு செய்யும் ஒருவகைத் தந்திரவித்தை ; தந்திரம் ; சூழ்ச்சியான செயல் ; சிக்கனம் . |
செப்பம் | செவ்வை ; நடுநிலை ; சீர்திருத்தம் ; பாதுகாப்பு ; செவ்விய வழி ; தெரு ; நெஞ்சு ; மனநிறைவு ; ஆயத்தம் . |
செப்பமிடுதல் | காண்க : செப்பஞ்செய்தல் . |
செப்பல் | சொல்லுகை ; காண்க : செப்பலோசை ; செந்நிறம் . |
செப்பல்பிரிதல் | பொழுதுவிடிதல் . |
செப்பலி | கடல்மீன்வகை . |
செப்பலோசை | வெண்பாவுக்குரிய ஓசை . |
செப்பலோடுதல் | செந்நிறங்கொள்ளுதல் . |
செப்பனிடுதல் | சீர்திருத்துதல் ; சமப்படுத்துதல் ; மெருகிடுதல் . |
செப்பாடு | நேர்மை . |
செப்பிக்கூறுதல் | விடைசொல்லுதல் . |
செப்பிடில் | காண்க : சடாமாஞ்சில் . |
செப்பிடுவித்தை | காண்க : செப்படிவித்தை . |
செப்பியம் | திரும்பத்திரும்ப உச்சரித்தல் . |
செப்பிலை | காண்க : தும்பை . |
செப்பு | சொல் ; விடை ; செம்பு ; சிமிழ் ; நீர் வைக்கும் குடுவை ; சிறுமியர் விளையாட்டுப் பாத்திரம் ; இடுப்பு . |
செப்புக்கட்டை | பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை . |
செப்புக்குடம் | செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் . |
செப்புக்கோட்டை | செம்பினாலியன்ற இராவணன் கோட்டை . |
செப்புச்சிலை | செம்பாலான உருவம் ; மாந்தளிர்க்கல் . |
செப்புத்திருமேனி | செம்பினாலாகிய சிலை . |
செப்புத்துறை | இடுகாடு . |
செப்புதல் | சொல்லுதல் ; விடைசொல்லுதல் . |
செப்புநெருஞ்சி | சிவப்பு நெருஞ்சிப்பூடு . |
செப்புப்பட்டயம் | செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் . |
செப்புப்பத்திரம் | செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் . |
செப்புவழு | விடைக்குற்றம் . |
செப்பேடு | காண்க : செப்புப்பட்டயம் . |
செப்போடு | செம்பாலாகிய ஓடு . |
செபத்தியானம் | மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கடவுளை நினைந்திருத்தல் . |
செபம் | மந்திரமோதல் ; வேண்டுதல் ; சூழ்ச்சி . |
செபமாலை | செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை . |
செபவடம் | செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை . |
செபித்தல் | மந்ததிரம் சொல்லுதல் ; வேண்டுதல் . |
செம் | சிவப்பு ; செம்மை . |
செம்பக்கால் | வெற்றிலைக்கொடி நடாத இளமையான அகத்திச் செடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம் . |
செம்பகம் | காண்க : செண்பகம் . |
செம்பகை | யாழ்க்குற்றம் நான்கனுள் ஒன்று . இன்பமின்றி இசைத்தலாகிய தாழ்ந்த இசை . |
செம்பசலை | சிவப்புப் பசளைக்கீரை . |
செம்பசளை | சிவப்புப் பசளைக்கீரை . |
செம்பஞ்சி | ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு . |
![]() |
![]() |
![]() |