சொல்
|
அருஞ்சொற்பொருள் |
செம்பஞ்சு | ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு . |
செம்பஞ்சுக்குழம்பு | மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக் கலவை . |
செம்பஞ்சூட்டுதல் | மகளிர் அடிகட்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் . |
செம்பட்டை | சிவந்த மயிர் ; வாத்தியவகை . |
செம்படத்தி | செம்படவப்பெண் . |
செம்படவன் | மீன்வலைஞன் . |
செம்படாம் | சிவப்புச் சீலை . |
செம்படை | சிவந்த மயிர் . |
செம்படைச்சி | காண்க : செம்படத்தி . |
செம்பத்தி | உண்மையான அன்பு . |
செம்பரத்தை | ஒரு செடிவகை . |
செம்பருத்தி | உயர்ரகப் பூணூல் நூற்க உதவும் பருத்திவகை ; செம்பஞ்சு ; பருத்திவகை . |
செம்பருந்து | கருடன் . |
செம்பலகை | செங்கல் . |
செம்பலா | இலவங்கவகை . |
செம்பவளம் | வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை ; உருண்டை வடிவுள்ள பவளவகை . |
செம்பளித்தல் | அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் . |
செம்பிளித்தல் | அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் . |
செம்பாகம் | சரிபாதி ; இனிமை ; நல்ல பக்குவம் . |
செம்பாட்டுத்தரை | செம்மண் பூமி . |
செம்பாட்டுநிலம் | செம்மண் பூமி . |
செம்பாட்டுமண் | செம்மண் பூமி . |
செம்பாடு | செம்மண் பூமி ; செம்மண் படிந்தது . |
செம்பாதி | சரிபாதி . |
செம்பாம்பு | கேது . |
செம்பால் | காண்க : சுரோணிதம் ; சரிபாதி . |
செம்பால்பாய்தல் | கட்டிளமையால் உடலில் இரத்த ஓட்டம் தெரியும்படியா யிருத்தல் . |
செம்பாலை | பாலைப் பண்வகை . |
செம்பாளை | சம்பா நெல்வகை ; சிவப்பு நெல்வகை . |
செம்பி | கருவண்டு ; மருதோன்றி ; சிவப்பி . |
செம்பித்தரோகம் | பித்தநோய்வகை . |
செம்பியன் | முதலேழு வள்ளல்களுள் ஒருவன் ; சிபியின் வழி வந்த சோழன் . |
செம்பியன் தமிழ்ப்பேரரையன் | பிற்காலத்துச் சோழர்களால் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களுள் ஒன்று . |
செம்பியன் தமிழவேள் | பிற்காலத்துச் சோழர்களால் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களுள் ஒன்று . |
செம்பிற்பொருப்பு | செம்புத் தாதுள்ள பொதியமலை . |
செம்பிறப்பு | அறுவகைப் பிறப்பினுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு . |
செம்பின்பச்சை | நாகப்பச்சை . |
செம்பு | தாமிரம் ; பொன் ; செம்பினாலான பாத்திரவகை ; மூன்றேகால் சேர்கொண்ட ஒரு முகத்தலளவு ; தூர்தல் . |
செம்புகம் | செம்போத்துப்பறவை ; நரி . |
செம்புகொட்டி | செம்புவேலை செய்யும் சாதியான் , கன்னான் . |
செம்புண் | ஆறும் நிலையில் உள்ள புண் ; இரத்ததாற் செந்நிறமாயிருக்கும் புண் . |
செம்புண்ணீர் | இரத்தம் . |
செம்புத்தீக்கல் | இரும்புஞ் செம்புங் கலந்த உலோகக்கட்டி . |
செம்புப்பற்று | பொன்னிற் கலந்த செம்பு . |
செம்புமணல் | செம்பு கலந்த மணல் . |
செம்புமலை | செம்புத் தாதுகளைத் தன்னிடத்தேகொண்ட மலை . |
செம்புயிர் | கீழ்மக்கள் , விலங்கு இவற்றின் உயிர் . |
செம்புலம் | செழிப்பான நிலம் ; போர்க்களம் ; பாலைநிலம் ; சுடுகாடு ; காண்க : செம்புமலை . |
செம்புலியாடு | செம்மறியாடு . |
செம்புவரை | காண்க : செம்பிற்பொருப்பு . |
செம்புள் | கருடன் . |
செம்புளிச்சை | காண்க : தேவதாரு ; மரவகை . |
செம்புனல் | இரத்தம் ; புதுவெள்ள நீர் ; சிவந்த நீர் . |
செம்பூ | செந்நிறப் பூவுள்ள செடிவகை . |
செம்பூறல் | செம்பில் உண்டாகும் களிம்பு . |
செம்பை | காண்க : சிற்றகத்தி ; ஒரு மரவகை ; நெற்பயிரின் நோய்வகை . |
செம்பொடி | பூந்துகள் , மகரந்தப்பொடி ; செம்மணல் ; நீலக்கல் ; சிந்தூரம் . |
செம்பொத்தி | ஆடைவகை . |
செம்பொருள் | உண்மைப்பொருள் ; நேர்பொருள் ; சிறந்தபொருள் ; முதற்பொருளான கடவுள் ; அறம் . |
செம்பொருளங்கதம் | வாய் கரவாது சொல்லிய வசைப்பாட்டு . |
செம்பொறி | அரசமுத்திரை . |
செம்பொன் | சிறந்த பொன் . |
செம்பொன்வரை | செம்பொன்மயமான மேருமலை . |
செம்போக்கு | உயர் பதவிகளில் உயிர் செல்லல் . |
செம்போத்து | ஒரு பறவைவகை ; கள்ளிக் காக்கை . |
செம்போதகர் | சமணருள் ஒரு பகுதியார் . |
செம்மகள் | திருமகள் ; அனுபவமற்ற பெண் . |
செம்மட்டி | மரமஞ்சள் ; ஒரு சிப்பிவகை . |
செம்மண் | சிவந்த மண் . |
செம்மண்பட்டை | நல்ல நாள்களில் திண்ணை முதலியவற்றில் சுண்ணாம்புப் பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம் . |
செம்மணத்தி | செம்புளிச்சை . |
செம்மணி | மாணிக்கம் ; சிவப்புமணி ; கெம்புக்கல் ; கண்ணின் கருமணியைச் சூழ்ந்திருக்கும் சிவந்த மணி . |
செம்மரம் | அழிஞ்சல்மரம் ; ஒருமரவகை ; காண்க : மஞ்சாடி ; தேவதாரு ; செஞ்சந்தனம் . |
செம்மருதர் | நல்ல உழவர்கள் . |
செம்மல் | தலைமை ; வலிமை ; தருக்கு ; பெருமையிற் சிறந்தோன் ; இறைவன் ; சிவன் ; அருகன் ; புதல்வன் ; சாதிபத்திரி ; முல்லைப்பூவகை ; பழம்வகை ; வாடாப்பூ ; நீர் . |
![]() |
![]() |
![]() |