சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நிசை | இரவு . |
நிட்கண்டகம் | தீமையின்மை ; கண்ணோட்டமின்மை . |
நிட்கண்டகன் | பகையற்றவனாகிய சிவபெருமான் . |
நிட்கம் | வராகனெடை ; நாணயவகை ; பொன் ; பறைவகை . |
நிட்களங்கம் | மாசின்மை . |
நிட்களசிவம் | அருவமான சிவம் . |
நிட்களம் | உருவமின்மை ; தூய்மை . |
நிட்களர் | அருவமூர்த்தியான சிவபெருமான் . |
நிட்காமியம் | விருப்பமின்மை ; பயனை விரும்பாது செய்யும் செயல் . |
நிட்காரணம் | காரணம் இன்மை . |
நிட்காரம் | நிந்தை . |
நிட்குடி | ஏலம் . |
நிட்சணம் | முத்தங்கொடுக்கை . |
நிட்சேபம் | எட்டுப் போகத்துள் ஒன்றாகிய புதைபொருள் . ஈட்டுப்பொருள் . |
நிட்டுரதரன் | வன்னெஞ்சன் . |
நிட்டுரவன் | வன்னெஞ்சன் . |
நிட்டூரம் | கொடுமை . |
நிட்டூரி | கொடியவள் . |
நிட்டை | தியானம் ; நோன்புநோற்றல் . |
நிட்பலம் | பயனின்மை . |
நிட்பிரபஞ்சம் | பிரபஞ்சத்தைக் கடந்தது . |
நிட்பிரபஞ்சன் | அமைதியானவன் , சாந்தமுள்ளவன் . |
நிடதம் | எண்குல மலைகளுள் ஒன்று , ஒரு நாடு ; முட்டியாக இரண்டு கையுஞ் சமன்செய்யும் இணைக்கைவகை . |
நிடலம் | நெற்றி . |
நிடலாட்சன் | நெற்றிக்கண்ணனான சிவபிரான் . |
நிடாதம் | ஏழிசைகளுள் ஏழாவது . |
நிடூதனம் | கொலை . |
நிடூதனன் | கொலைஞன் . |
நிடேகம் | மணமக்கள் முதன்முறை கூடும் சடங்கு . |
நிடேதம் | விலக்கு ; விலக்கப்பட்ட பொருள் . |
நிண்டுதல் | நிமிண்டுதல் . |
நிண்ணயம் | ஏற்பாடு ; உறுதி ; ஆராய்வு . |
நிண்ணயம்பண்ணுதல் | உறுதிசெய்தல் . |
நிணச்செருக்கு | உடற்கொழுப்பாலாகிய ஆணவம் . |
நிணத்தல் | கொழுத்தல் ; கட்டுதல் ; முடைதல் . |
நிணத்திசு | இரத்தச் சவ்வு . |
நிணநரம்புகள் | ஊன் நரம்புகள் . |
நிணநெய் | மணிக்கட்டுகளில் உண்டாகும் பசை . |
நிணம் | கொழுப்பு ; ஊன் ; ஊனீர் . |
நிணர்தல் | கட்டுதல் ; செறிதல் . |
நிணவை | பிணிப்பு ; பின்னிச்செய்யப்பட்டது . |
நிணறு | உருக்கம் ; இதம் . |
நித்தக்கட்டளை | காண்க : நித்தியக்கட்டளை . |
நித்தகருமம் | காண்க : நித்தியகருமம் . |
நித்தக்காய்ச்சல் | தினமும் அடிக்கும் சுரநோய் . |
நித்தத்துவம் | என்றுமுளதாந்தன்மை . |
நித்தநிமிந்தம் | கோயில் நித்தியக்கட்டளை . |
நித்தம் | என்றும் அழியாதுள்ள நிலை ; காண்க : நித்தியகருமம் ; ஓமகுண்டம் ; நீர்முள்ளிப் பூண்டு . |
நித்தரங்கசமுத்திரம் | அலையற்ற கடல் . |
நித்தல் | எந்நாளும் . |
நித்தலும் | எந்நாளும் . |
நித்தவிநோதம் | அருகனது முக்குடைகளுள் ஒன்று . |
நித்தன் | அருகன் ; கடவுள் ; சிவன் . |
நித்தாநித்தம் | நிலைபேறும் நிலையாமையும் . |
நித்தாரம் | தீர்மானம் ; நிருணயம் . |
நித்திகம் | கண்டங்கத்திரி ; தூதுவளை . |
நித்தியகட்டளை | அன்றாட ஏற்பாடு . |
நித்தியகருமம் | அன்றாடஞ் செய்யவேண்டிய செயல்கள் . |
நித்தியகலியாணம் | நிலைத்த இன்பம் ; என்றும் உள்ள மகிழ்ச்சி . |
நித்தியகலியாணி | பார்வதி ; பிள்ளையார்பூ என்னும் செடி . |
நித்தியசூரி | மாலுலகத்து வாழ்கின்ற முத்தர்கள் . |
நித்தியத்துவம் | அழிவின்மை . |
நித்தியநைமித்திகம் | நாள் வழிபாடும் விழாவும் . |
நித்தியப்படி | நாடோறும் ; தினமும் நடக்குங் கட்டளைப்படி . |
நித்தியப்பிரளயம் | உயிர்களின் சுழுத்திநிலை ; இறப்பு ; நாள்தோறும் நிகழும் பிரளயம் . |
நித்தியபூசை | நாள்தோறும் நடைபெறும் வழிபாடு . |
நித்தியம் | அழியாமை ; எப்பொழுதும் ; வீடுபேறு ; கடல் ; நாடோறும் ; காண்க : நித்தியபூசை ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; காண்க : நித்திகம் . |
நித்தியமுத்தன் | கடவுள் ; பிரமஞானி . |
நித்தியமுத்தி | மீளாத நற்கதி . |
நித்தியமோட்சம் | மீளாத நற்கதி . |
நித்தியயோகம் | குறையாச் செல்வம் ; என்றும் விடாச் சேர்க்கை . |
நித்தியயௌவனம் | மாறா இளமை . |
நித்தியல் | காண்க : நித்தியபூசை ; நித்தியக்கட்டளை . |
நித்தியவாழ்வு | மோட்சப்பதவி ; நிலைத்த வாழ்க்கை . |
நித்தியவிதி | அன்றைய செயல் ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; இறந்தவர்பொருட்டுப் பத்துநாளும் செய்யும் சடங்கு ; ஓமக்கிடங்கு ; பலி கொடுக்குமிடம் . |
![]() |
![]() |
![]() |