சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மகாசாமந்தன் | பெரிய படைத்தலைவன் . |
மகாசூதம் | போர்ப்பறை . |
மகாசூரன் | பெருவீரன் ; தறுகணாளன் . |
மகாசேனன் | படைத்தலைவன் ; கந்தன் ; அருகன் ; புத்தன் . |
மகாசோபம் | நூறுகோடி கோடாகோடி . |
மகாண்டு | அறுபது ஆண்டுகொண்ட வியாழவட்டம் . |
மகாத்தியாகம் | பெருந்துறவு . |
மகாத்துமா | பேரறிஞர் ; பரமஞானி . |
மகாதசை | சாதகனுக்கு ஒரு கோளின் நடப்புக் காலம் . |
மகாதலம் | பூமி ; அரிதாரம் ; புண்ணியத்தலம் ; முதன்மைத் தலம் ; கீழேழுலகினுள் ஒன்று . |
மகாதனம் | பொன் ; வேளாண்மை ; புகை . |
மகாதுந்துமி | போர்ப்பறை . |
மகாதுருமம் | அரசமரம் . |
மகாதேவன் | கடவுள் ; சிவபிரான் ; வருணன் . |
மகாதேவி | பார்வதி ; பட்டத்தரசி . |
மகாதோரை | ஒரு பேரெண் . |
மகாநடன் | சிவபிரான் . |
மகாநதி | பேராறு ; கங்கை ; ஓர் ஆறு . |
மகாநவமி | கலைமகள் பூசை நிகழும் ஒன்பான் இரவின் இறுதிநாள் . |
மகாநாகம் | சுரபுன்னைமரம் ; பெரும்பாம்பு . |
மகாநாதம் | சங்கு ; சிங்கம் ; பேரொலி ; முகில் ; யானை ; வாத்தியக் கருவி . |
மகாநித்திரை | இறப்பு ; பெருந்துயில் . |
மகாநிம்பம் | காண்க : பூவரசு ; மரவகை ; பெருங்கள்ளி ; பீநாறி ; மலைவேம்பு . |
மகாநேமி | காகம் . |
மகாப்பிரசாதம் | கோயில்களில் கடவுளுக்குப் படைத்து அடியார்களுக்கு வழங்கும் பொங்கல் முதலியன . |
மகாப்பிரபு | பெருஞ்செல்வன் ; பெருங்கொடையாளி . |
மகாபத்திரம் | பனைமரம் . |
மகாபதுமம் | குபேரனுக்குரிய ஒன்பதுவகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; வெண்டாமரை ; 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுகளையும் உடைய கோயில் ; சித்திரகவி வகை . |
மகாபலம் | தெங்கு ; வில்வம் ; கொழிஞ்சி ; தூதுவளை . |
மகாபலை | வில்வம் . |
மகாபாதகம் | பொய் , கொலை , களவு , கள் , காமம் , என்னும் ஐம்பெரும் பாதகம் . |
மகாபிரதானி | முதல்மந்திரி . |
மகாபுருடன் | சான்றோன் . |
மகாபூரி | ஒரு பேரெண் . |
மகாபோதி | கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம் . |
மகாமகம் | பன்னீராண்டிற் கொருமுறை மாசிமகத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா . |
மகாமண்டபம் | கோயிலில் அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம் . |
மகாமந்திரமூர்த்திகள் | ஏழரைக் கோடியினரான உயர்தர ஆன்மாக்கள் . |
மகாமாயி | துர்க்கை . |
மகாமாயை | பார்வதி ; காண்க : சுத்தமாயை . |
மகாமார்க்கம் | சிறந்த சமயநெறி . |
மகாமாரி | துர்க்கை ; கொள்ளைநோய் . |
மகாமிருகம் | யானை . |
மகாமுகம் | முதலை . |
மகாமுனி | பெருந்தபோதனன் ; அகத்தியன் ; புத்தன் . |
மகாமேதை | பேரறிவு ; பேரறிவாளன் ; மருள் ஊமத்தை . |
மகமேரு | பொன்மலை , மேருமலை . |
மகாமேரு | பொன்மலை , மேருமலை . |
மகாயுகம் | நான்கு யுகம் கூடியதும் 43,20,000 ஆண்டுகள் கொண்டதுமான் காலம் . |
மகார் | புதல்வர் ; பாலர் ; மக்கள் ; இடக்கு . |
மகாரதன் | பதினோராயிரம் தேர்வீரரோடு போர்செய்வோன் . |
மகாராணி | பேரரசி . |
மகாரோகம் | குட்டம் முதலிய பெருநோய் . |
மகாலட்சுமி | திருமகள் . |
மகாலயம் | கோயில் ; பிதிரர்க்குப் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையில் செய்யும் சிராத்தம் ; பிரமலோகம் ; புரட்டாசி மாதத்துத் தேய்பிறை . |
மகாலயன் | கடவுள் ; நான்முகன் . |
மகாவற்புதம் | ஒரு பேரெண் . |
மகாவாக்கியம் | ' தத்துவமசி ' என்னும் தொடர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
மகாவிந்தம் | ஒரு பேரெண் ; நளனது தலை நகரம் ; வைகுந்தம் . |
மகாவிந்து | அப்பிரகம் . |
மகாவிரதம் | சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று ; சமண நோன்புவகை . |
மகாவிலயம் | வானம் ; இதயம் ; குகை ; நீர்ச்சாடி . |
மகாவீரன் | அக்கினி ; அருகதேவன் ; கருடன் ; திருமால் ; பெருவீரன் . |
மகான் | அறிவுத்தத்துவம் ; பெரியோன் . |
மகானுபாவன் | பேரறிஞன் ; சிறந்தவன் ; ஞானி ; கொடைப்பண்பினன் . |
மகி | பூமி ; பசு . |
மகிடம் | எருமைக்கடா . |
மகிடமர்த்தனி | துர்க்கை . |
மகிடவாகனன் | எருமையை ஊர்தியாகவுடைய யமன் . |
மகிடவாகனி | எருமையை ஊர்தியாகவுடைய துர்க்கை . |
மகிடற்செற்றாள் | மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை . |
மகிடாசுரமர்த்தினி | மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை . |
மகிடி | காண்க : மகுடி ; வெளிக்காணாமல் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை ; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரி கருக்குள் நிகழும் போட்டி . |
மகிடித்தல் | மக்களித்தல் ; தலைகீழாக விழுதல் . |
மகிணன் | காண்க : மகிழ்நன் ; சுவாமி . |
![]() |
![]() |
![]() |