சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மகிதம் | சிவபிரானது திரிசூலம் . |
மகிதலம் | பூமி . |
மகிந்தகம் | எலி ; கீரி . |
மகிபன் | அரசன் . |
மகிபாலன் | அரசன் . |
மகிமா | எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல் . |
மகிமை | பெருமை ; காண்க : மகமை ; சிறப்பு , மதிப்பு . |
மகிலை | பெண் ; வெறிபிடித்தவள் . |
மகிழ் | இன்பம் ; குடிவெறி ; மது ; மரவகை . |
மகிழ்ச்சி | உவகை ; காண்க : மகிழ்ச்சியணி . |
மகிழ்ச்சிநிலை | உள்ளமிகுதி . |
மகிழ்ச்சியணி | மகிழ்ந்து சொல்லுகையாகிய அலங்காரவகை . |
மகிழ்ச்சிவினை | புண்ணியம் , நல்வினை . |
மகிழ்த்தாரான் | மன்மதன் . |
மகிழ்தல் | அகங்களித்தல் ; உணர்வழிய உவகை எய்துதல் ; குமிழியிடுதல் ; விரும்புதல் ; உண்ணுதல் . |
மகிழ்நன் | கணவன் ; மருதநிலத் தலைவன் . |
மகிழ்வு | இன்பம் . |
மகிழம் | மகிழமரம் . |
மகிழலகு | மகிழம்விதை . |
மகிளம் | பூவிதழ் . |
மகீதரம் | மலை . |
மகீபதி | அரசன் . |
மகீபன் | அரசன் . |
மகீருகம் | பூமியில் முளைப்பதான தாவரம் . |
மகீலதை | நாங்கூழ் . |
மகுடம் | மணிமுடி ; தலைப்பாகைவகை ; தலையணி ; பல பாடல்களில் ஓர் இறுதியாக வரும் முடிவு ; கட்டுரைத் தலைப்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை ; மாதர் காதணி வகை ; மத்தளத்தின் விளிம்பு ; பறைவகை ; ஒளிமங்கல் . |
மகுடராகம் | ஒரு பண்வகை . |
மகுடராமக்கிரியம் | ஒரு பண்வகை . |
மகுடவர்த்தனர் | முடிமன்னர் . |
மகுடாதிபதி | முடியுடை வேந்தன் . |
மகுடி | இசைக்கருவிவகை ; பாம்பாட்டியின் ஊது குழல்வகை . |
மகுரம் | கண்ணாடி ; பளிங்கு ; பூமொட்டு ; தண்ட சக்கரம் . |
மகுலம் | காண்க : மகிழம் . |
மகுளி | ஓசை ; எட்பயிர் நோய்வகை . |
மகுளிபாய்தல் | பெருமழையால் நிலம் இறுகிவிடுதல் ; நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல் . |
மகூலம் | மலர்ந்த பூ . |
மகேச்சுரன் | சிவபெருமான் . |
மகேசன் | சிவபெருமான் . |
மகேசுரவடிவம் | இலிங்க வடிவொழிந்த சிவமூர்த்தங்கள் . |
மகேசுவரன் | காண்க : மகேச்சுரன் . |
மகேசுவரி | பார்வதி . |
மகேந்திரசாலம் | வியப்பைக் காட்டும் வித்தை . |
மகேந்திரம் | ஒரு மலை . |
மகேந்திரன் | இந்திரன் . |
மகேசுவரியம் | பெருஞ்செல்வம் . |
மகோததி | கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு . |
மகோதயம் | ஒரு புண்ணியகாலம் ; பெருமை ; வீடுபேறு ; மேன்மை . |
மகோதரம் | பூதம் ; பெருவயிற்றுநோய் . |
மகோதை | கொடுங்கோளூர் . |
மகோற்சவம் | பெரிய திருவிழா . |
மகோன்மதம் | மிகுவெறி . |
மகோன்னதம் | மிக்க உயரம் ; உயர்ந்த நிலை ; பனை . |
மகௌடதம் | சுக்கு ; திப்பிலி ; வசம்பு ; நன்மருந்து . |
மங்கல் | கெடுதல் ; ஒளிமங்குதல் ; இருள்நேரம் . |
மங்கல்யம் | காண்க : மாங்கலியம் . |
மங்கலக்கருவி | யாழ் முதலிய இசைக்கருவிகள் ; சவரக்கத்தி . |
மங்கலக்கிழமை | செவ்வாய்க்கிழமை . |
மங்கலகாரியம் | நற்செயல் . |
மங்கலகீதம் | காண்க : மங்கலப்பாட்டு . |
மங்கலகௌசிகம் | ஒரு பண்வகை . |
மங்கலச்சொல் | மங்கலமொழி , நன்மையைக் குறிக்கும் மொழி ; வாழ்த்துரை ; செய்யுள்களின் முதலில் வரற்குரிய திரு , பூ , உலகம் முதலிய நன்மொழிகள் . |
மங்கலசூத்திரம் | தாலிக்கயிறு . |
மங்கலத்திருநாள் | புண்ணியதினம் , திருவிழாவில் சிறந்த நாள் . |
மங்கலத்துகில் | வெண்துகில் . |
மங்கலதினம் | காண்க : மங்கலநாள் . |
மங்கலநாண் | தாலிக்கயிறு , கழுத்திலணியும் திருமங்கலியச் சரடு . |
மங்கலநாள் | நன்னாள் . |
மங்கலப்பாட்டு | நல்ல காலங்களில் பாடும் பாட்டு . |
மங்கலப்பிரதை | மஞ்சள் . |
மங்கலப்பொருத்தம் | செய்யுள் முதன்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது . |
மங்கலபத்திரிகை | திருமண அழைப்பிதழ் . |
மங்கலபாடகர் | அரசர் முதலியோரைப் பாடுவோர் . |
மங்கலபேரிகை | நல்ல காலங்களில் முழக்கும் முரசம் . |
மங்கலம் | திருமணம் ; ஆக்கம் ; பொலிவு ; நற்செயல் ; நன்மை ; தாலி ; தருமம் ; சிறப்பு ; வாழ்த்து ; காண்க : மங்கலவழக்கு ; எண்வகை மங்கலம் ; சேகரிப்பு ; தகனபலி ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச் சொல் . |
மங்கலம்பதினாறு | கவரி , நிறைகுடம் , கண்ணாடி , கோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் என்னும் எண்வகை மங்கலத்தோடு வாள் , குடை , ஆலவட்டம் , சங்கம் , தவிசு , திரு , அரசியலாழி , ஓமாலிகை என்னும் எட்டுஞ் சேர்ந்த பதினாறு வகையான எடு பிடிகள் . |
![]() |
![]() |
![]() |