காய்சினவேந்தப் பெருமாள்கோவில் திருப்புளிங்குடி 1

    கொடுவினைப் படைகள் வல்லையாய்
     அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர் செய்
    கடுவினை நஞ்சே என்னுடையமுதே
     கலிவயல் திருப்புளிங்குடியாய்
    வடிவினை இல்லா மலர்மகள் மற்றை
     நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
    கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
    கூவுதல் வருதல் செய்யாயே
        (3577) திருவாய்மொழி 9.2.10

“நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக்
கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன்.
அந்தோ நீ வராதிருக்கின்றாயே” என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட
இத்திருத்தலம் வரகுண மங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல்
தொலைவில் உள்ளது.

பின்