-
சங்க காலம் தமிழ்மக்களின் பொற்காலம்.
-
இக்காலம் அகம், புறம் என்ற அடிப்படையில் அமைந்த தனிச்
செய்யுட்களின் காலமாகும்.
-
சங்க காலத்தை வரையறுத்தலில் கருத்து ஒற்றுமை இல்லை.
எனினும் கி.பி.முதல் மூன்று
நூற்றாண்டுகள் என்பது பலரும்
வற்புறுத்தும் கருத்து.
-
மன்னர் சிலர் உதவி பெற்றுச் சான்றோர்கள் இவ்வுதிரிப்
பாடல்களைத் தொகுத்தனர்.
-
அகம், புறம் என்ற திணைப்பாகுபாடும், பா வகையும்,
செய்யுட்களின் அடியளவும் தொகைகள் அமைய
அடிப்படைகளாயின.
-
எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று மொத்தம் 9
தொகுதிகளை உடையது சங்க இலக்கியம்.
-
எட்டுத்தொகை நூல்களை (1) அகம் சார்ந்தன (2) புறம்
சார்ந்தன (3) இரண்டும்
கலந்தன என்று மூன்று பகுதிகளாகக்
காணலாம்.
-
பத்துப்பாட்டிலுள்ளவை (1) அகம் (2) புறம் என்ற இரு
பிரிவுகள் அடங்கும்.
புற இலக்கியங்களுள் ஆற்றுப்படைகள்
ஐந்து என்பது குறிக்கத்தக்கது.
-
திருமுருகாற்றுப்படை பாட்டுடைத்தலைவன் பெயரால்
அறியப்படுவது தனிச்சிறப்பு.
-
ஒவ்வொரு நூலின் தனித்த பண்புகளையும் அறிந்து கொள்ள
முடிந்தது.
-
சங்க இலக்கியங்கட்குரிய சில தனிப்பட்ட பண்புகளை அறிந்து
கொண்டோம்.