3.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை சொற்பிறப்பு ஆய்விற்கு எங்ஙனம் சொற்பொருள் ஆய்வு பயனுடையதாக விளங்குகின்றது என்பதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • சொற்பொருள் ஆய்வு இல்லாமல், சொற்பிறப்பை அறிந்து கொள்ளுதல் என்பது இயலாத ஒன்று என்பதை இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.
  • ஒரே வடிவம் கொண்ட அடிச்சொற்களின் வேர்ப்பொருள் எங்ஙனம் மாற்றமடைந்துள்ளது என்பதையும், சொல் தனது சிறப்பியல்பால் பொருளைச் சுட்டும் தன்மையினையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
  • சொற்பொருள் சார்புத் தன்மையாலும், இனந்தழுவுதலாலும், இயல்பு நிலையிலும், எதிர் நிலையிலும் எவ்வாறெல்லாம் தன் பொருள் விரிவடைந்து மாற்றங்களைப் பெற்றுள்ளது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
‘வேலி’ என்ற சொல் எங்ஙனம் ‘நிலம்' என்ற சொல்லோடு தொடர்புடையது?
2.
‘புல்’ என்ற சொல் எவ்வாறு தென்னை, பனை முதலியவற்றைக் குறிக்கும்?
3.
மயிலின் தோகை பெண்ணுக்குரிய சொல்லாக மாறிய வடிவத்தைக் குறிப்பிடுக.
4.
‘ஆண்டி’ என்ற சொல் உணர்த்தும் இருபொருட்கள் யாவை?