இறை வாழ்த்து
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
வடலூர் வள்ளலார்
இவரின் இயற்பெயர் இராமலிங்கம். பெற்றோர் பெயர் இராமையா, சின்னம்மை. பிறந்த ஊர் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்.
இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் வடலூரில் சத்திய ஞான சபை அமைத்தவர். அங்கு ஞானம், உணவு ஆகியவற்றை மக்களுக்குத் தந்தவர். அதனால் இவர் வடலூர் வள்ளலார் எனப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம் 1823 முதல் 1874 வரை.