6. சமய இலக்கியம்

அல்லா

பாடல்
Poem


அல்லா

வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும்

மறை தெளிந்த மற்றை யோர்க்கும்

ஊனுடைய பல்லுயிர்க்கும் உணர்வாகி

பேரொளியாய் ஓங்கி நின்ற

ஞானமெனும் பரம்பொருளே! அழியாத

பெரும்பேறே! நடுநின் றென்றும்

ஊனமற விளையாடி எவ்விடத்தும்

எந்நாளும் உறையும் கோவே.

- உமறுப்புலவர்