ix |
நிறுவனத் தலைவர் ஆணையைச் செயல்படுத்துமுகத்தான்
மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை அவர்களின் யாப்பருங்கலம் என்ற
நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுகிறது.
|
மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை அவர்களுடைய திருத்தம்
பெறாமல், யாப்பருங்கலம் 1960 - இல் வெளிவந்தது என்பது முன்னரே
குறிக்கப்பட்டது. 1972 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வாயிலாகப்
புலவர்மாமணி இரா.இளங்குமரன் அவர்கள் யாப்பருங்கலத்தைச்
செம்மையாகப் பதிப்பித்தார். புலவர் இரா. இளங்குமரன் அவர்களால்,
மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை பதிப்பித்த ‘யாப்பருங்கலம்’ எனும்
இந்நூலும் செப்பம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
|
புலவர் இளங்குமரன் அவர்கள் இப்பதிப்பினைச் சிறப்புச் செய்யும்
வகையில் ஆய்வுரையும் எழுதியுள்ளார்.
|
அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தின்கீழ் இந்நூல் வெளிவர நிதி
நல்கிய தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ச. நாகராசன் அவர்களுக்கு
எங்கள் நன்றி.
|
இந்நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டிவருகின்ற
நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி - பண்பாடு மற்றும்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்
துறைச் செயலாளர் திருமிகு. த. இரா. சீனிவாசன் இ.ஆ.ப., அவர்களுக்கும்
எங்கள் நன்றி.
|
இந்நூலின் மெய்ப்புத்திருத்திய நீலகண்டபிள்ளை அவர்களுக்கும்,
இப்பதிப்பில் அகராதிகளின் பக்க எண்களைத் திருத்தி அமைத்த நிறுவனச்
சுவடிப்புல ஆராய்ச்சி உதவியாளர்களான திரு. மொ. மருதமுத்து, திரு. மூ.
பரிமணன் ஆகியோருக்கும். இந்நூலினை வனப்புற அச்சிட்டுத்தந்த பார்க்கர்
கம்பியூட்டர் & பப்ளிகேஷன் வே. கருணாநிதி அவர்களுக்கும் நன்றி.
|
10.9.98 |
இயக்குநர்
|