ஐயரவர்கள் எண்ணியதை நிறைவேற்ற நான் கடமையுற்ற வனாதலால்
இப்பதிப்பை செங்கணம் ரெட்டியாரவர்களுக்கு அர்ப்பணம் செய்து அவர்கள்
ஞாபகார்த்தமாக வெளியிடுகிறேன். அவருடைய பௌத்திரர் ஸ்ரீ N. A.
விருத்தாசல
ரெட்டியார் என்பவர் இப்போது செங்கணத்துக்கு அருகேயுள்ள வெண்பாவூர் என்னு
மிடத்தில் சுக ஜீவியாக இருந்து குடும்பத்தின் பெருமையைப் பாது காத்து வருகிறார்.
இப்போது இவர் இப்பதிப்பைப் பார்த்துச் சந்தோஷ மடைய விருப்பது எனக்கு
ஆறுதலாக இருக்கிறது.
|