தொல்காப்பிய உவமவியல் |
தண்டியலங்காரம்
|
2. |
ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமை
கூறுங்கால் மேற்கூறிய நான்கினுள் ஒவ்வொன்றேயன்றி விரவியும் உவமிக்கலாம். |
மேற்காட்டிய நூற்பாவில் 'என்றிவற்றின் '
என்ற மிகையால் இக்கருத்து உரையாசிரியரால் கொள்ளப்படுகிறது. |
3. |
சுட்டிக்கூறா வுவமை. |
தொகை யுவமை. |
4. |
'முதலும் சினையுமென்றாயிரு பொருளும்
நுதலிய மரபின் உரியவை உரிய' என்ற நூற்பாவில் பேராசிரியர் 'உரிய' என்னாது
'உரியவை' என்ற மிகையால் ஒரு பொருளை ஒரு பொருளோடு உவமிக்கும் பொழுது திணையும்
பாலும் மயங்கியும் வரலாம் என்பர். |
' மிகுதலும் குறைதலும் தாழ்தலும்
உயர்தலும், பால் மாறுபடுதலும் பாகுபாடுடைய' என்ற நூற்பாவில் ஆசிரியர்
இக்கருத்தினைக் கூறுவர். |
5. |
' பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பின் அஃ(து) உவமமாகும்.' |
இதனை விபரீத வுவமை என்பர். |
6. |
உவமப்போலி. |
ஒட்டணி. |
7. |
' வேறுபட வந்த உவமைத்தோற்றம் கூறிய
மருங்கிற் கொள் வழிக் கொளாஅல்' என்ற நூற்பாவில், இதுகாறும் கூறிய உவமை
யிலக்கணத்து வேறுபட வருவனவெல்லாம் கொள்க என்பர். |
தண்டியாசிரியர் உவம யணியின் வகையாகக்
கூறியிருப்பன பலவும், தொல்காப்பியர் கூறிய இவ்விலக்கணத்தில் ஒருவாறு அடக்கிக்
கொள்ளலாம். |
8. |
தடுமாறுவமம். |
இதரவிதரவுவமை. |
9. |
'அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே'. |
மாலை யுவமை. (சந்தானவுவமை)
|
10. |
'நிரனிறுத் தமைத்தல் நிரனிரை.' |
நிரனிறை உவமையணி.
|
தண்டியலங்காரத்தில் கூறப்பட்ட பொருளணிகள் 35. தொல்காப்பியத்தில்
இவற்றை யொத்துக் காணப்படுவன மிகச் சிலவே. ஆதலின் தொல்காப்பிய உவம இயலை
அடிப்படையாகக் கொண்டே,
|