நன்றியுரை:
|
அடியேனைச் இச்சீரிய பணிகளுக்கெல்லாம்
ஆளாகுமாறு ஆட்கொண்டருளுகின்றவர்கள் , திருப்பனந்தாள் ஸ்ரீ
காசிமடத்து அதிபர்
ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித்
தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஆவார்கள்.
அவர்களின் திருவடிமலர்களைப் பன்முறையும் வணங்குகின்றேன்.
|
இந்நூல்
வெளிவருங்கால் இன்முகம் குன்றாது அச்சுப் படியைத்
திருத்தி யுதவியர்கள் என் ஆசிரியப் பெருந்தகையான
திருவாளர் தி.வே.கோபாலனார்,
எம்.ஏ., பி.ஓ.எல். அவர்கள் ஆவர். அவர்களுக்கு என்
நன்றியும் வணக்கமும் உரிய.
|
இந்நூலை விரைவாகவும், செம்மையாகவும்
அச்சிட்டுதவிய ஜெமினி
அச்சகத்தின் உரிமையாளர் அவர்கட்கும், அங்குப்
பணிபுரியும் அலுவலர்களுக்கும் என் நன்றியறிதலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
|
இந்நூல் சென்னை, மதுரை, அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்து இடைநிலைத் தேர்வு மாணாக்கர்களுக்கும், B.A., M.A.,
மாணாக்கர்களுக்கும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழறிஞர்களும், மாணாக்கர்களும் இந்நூலை
வாங்கிக் பயன்படுத்தி, என்னை இத்துறையில்
மேலும் ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன்.
|
இந்நற்பணியில் ஈடுபடுத்தி ஆட்கொண்டருளும் இறைவனின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வழிபடுகின்றேன்.
|
|
'பிறையார் சடையண்ணல்
மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே'
|
|
திருப்பனந்தாள்
30-7-74 |
|
இங்ஙனம்
கு.சுந்தரமூர்த்தி
முதல்வர்
|