xii

நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும்
 

சிலாசாஸன பரிசோதனைத் தலைவர் ம-ள-ள-ஸ்ரீ டி.ஏ. கோபிநாதராயரவர்கள், எம்.ஏ., அன்புடன் தெரிவித்தார்கள்.

இந்நூலாசிரியருடைய ஊரும் மேற்கூறிய சனகையென்றே மேலே காட்டிய தொண்டைமண்டலசதகச் செய்யுளைக்கொண்டு சிலர் நிச்சயிக்கின்றனர். தொண்டை நாட்டிற் ‘‘சனகாபுரமென்று இக்காலத்து வழங்கப்படுகின்ற ஊர் இச்சனகையாக இருக்கலாமென்பது சிலர் கொள்கை; இந்நூலைச் செய்வித்த சீயகங்கன் மனைவியாகிய அரியபிள்ளை யென்பவள், திருவல்லத்தில் திருவல்லமுடைய நாயனாருக்கும் அம்பிகைக்கும் சந்தி விளக்கு ஒவ்வொன்று வைத்ததைத் தெரிவிக்கும் ( சாஸனமும் திருவேகம்பமுடையார்க்கு அவன் திருநுந்தாவிளக்கு வைத்ததைத் தெரிவிக்கும் காஞ்சீபுரசாஸனமும் இதற்கு அனுகூலமாக இருக்கின்றன.

கொங்குமண்டலத்திலுள்ள இருபத்துநான்கு நாடுகளுள் ஒன்றாகிய ( குறும்புநாட்டில், இக்காலத்திற் சீனாபுரம் என்று வழங்கப்படுவதும் முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடைய கோயில் உள்ளதுமான சனகாபுரம் இந்நூலாசிரியருடைய ஊரென்று பின்னுள்ள செய்யுளைக்கொண்டு நிச்சயிப்பாருமுளர்:-
 

(கொங்குமண்டலசதகம்)
 
( ‘‘கங்கக் குருசி லுவக்கநன் னூலைக் கனிந்துபுகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றிவளர்
கொங்கிற் குறும்பு தனிலாதி நாத குருவிளங்கு
மங்குற் பொழிற்சன காபுர முங்கொங்கு மண்டலமே.’’
 

* இவ்வூர், வேலூர் ஜில்லா, அரக்கோணம் தாலுகாவில், சோளசிங்கபுரம் (Sholinghur) போஸ்டைச்சார்ந்த ஊர்களிலொன்றாகத் தெரிகின்றது. ( ‘‘ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு முப்பத்து நாலாவது அமராபரணசீயகங்கனம் பிராட்டியான அரியபிள்ளை திருவல்லமுடைய நாயனார்க்குவைத்த சந்திவிளக்கு ஒன்றும் நாச்சியார்க்குவைத்த சந்திவிளக்கு ஒன்றும் இவ்விளக்கு இரண்டுக்கும்........’’ (South Indian Inscriptions, Vol, III, Part I, Pages, 122 - 123.)       ( ‘‘கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்’’ (தே. ஊர்த்தொகை.) இவ்வூர் ஈரோடு தாலுகாவிலுள்ளது.       ( இதனையும் பின்னுள்ள ‘‘சொல்காப் பியத்தின் குணதோடம்’’ என்னும் செய்யுளையும் திருச்செங்கோடு, உதயதிவாகரன் பத்திராதிபர் ம-ள-ள-ஸ்ரீ தி அ. முத்துசாமிக்கோனாரவர்கள் அன்புடன் எழுதியனுப்பினார்கள்.