வேற்றுநூல் நூற்பாக்கள்

1 தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி அன்றே.
  
2 மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.
(இவை இரண்டு நூற்பாக்களும் பனம்பாரம்)
  
3 நெடிலே குறில்நெடில் குறில்இணை என்றிவை
ஒற்றொடு வருதலொடு குற்றொற்று இறுதிஎன்று
ஏழ்குற் றுகரக்கு இடன்எனல் மொழிப.
  
4 தனிநிலை முதல்நிலை இடைநிலை ஈறுஎன
நால்வகைப் படூஉம்அளவு ஆய்வரும் இடனே.
   
5 இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும்.
  
6 செய்யுட்கண் ஓசை சிதையுங்கால் ஈரளபும்
ஐயப்பாடு இன்றி அணையுமாம்-மைதீர்ஒற்று
இன்றியும் செய்யுள் கெடின்ஒற்றை உண்டாக்கும்
குன்றுமேல் ஒற்றளபும் கொள்.
  
7 மாத்திரை வகையான் தளைதம கெடாநிலை
யாப்புஅழி யாமைஎன்று அளபெடை வேண்டும்.
  
8 தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்
சுட்டுதற் கண்ணேயாம் சொல்.
  
9 பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்.