LXXXXII பதிகம் பொன்மலை நின்று தென்மலை யுற்ற அகத்திய முனிவன் சகத்தவர்க் காகச் செந்தமி ழிலக்கண முந்துநூல் கிளப்பப் பல்கா லுன்னித் தொல்காப் பியமுனி யியற்றமிழ் முதலினின் றெடுத்துணர்த் திடவத னொட்பங் கண்டு தட்பங் கூரா தைந்திய லுந்தம் புந்தியின் வேறுகொண் டுறைத்த புலவர் வரைத்த வுரையான் முதலு முடிவுஞ் சிதர்தரப் பலவாய்க் கிடந்த வியலைத் தொடர்ந்தொரு வழிப்பட வீட்டலா னிலக்கண விளக்க மென்ன நாட்டினன் வைத்திய நாத தேசிக னன்னவன் றவத்தி னாலவ தரித்த முன்னவன் பாயிர மொழிந்துசொல் லணியுந் தற்பவ முதன்மூன் றிற்பட நாடிப் பகர்ந்தன னிளவல்பன் னூலு மாராய்ந் துகந்துதொல் காப்பியத் துண்மை தோன்ற வைந்திய லுந்தன் புந்திசான் றாகத் தந்தைமுன் னுரைத்தநூ றான்முடி பெய்த வந்த ணாரூர்ச் சந்திர மௌலி யருளுட் கொண்டு மருண்மன நீங்கிப் புலங்கொளப் பாட்டிய லிளங்க வுரைத்தனன் வாய்மைதரு தியாக ராய தேசிகனே. |
(இப்பதிகச் செய்யுள் பிரித்து எழுதப்பட்டநிலை பின்வருமாறு) பொன்மலை நின்று தென்மலை உற்ற அகத்திய முனிவன் சகத்தவர்க்கு ஆகச் செந்தமிழ் இலக்கண முந்துநூல் கிளப்பப் பல்கால் உன்னித் தொல்காப் பியமுனி |
|