| பிற்சேர்க்கை - 1. 
 | 
 
 | சிதம்பரப் பாட்டியல் 
 | 
 
 | *
4. பொருத்தவியல் 
 | 
 
 | பொருத்தங்கள் பத்து 
 | 
 
 | பகர்செய்யுள் மங்கலச்சொல் எழுத்து, தானம், | 
 
 |  | பால்,உண்டி, வருணம்,நாள், கதியே என்றா 
 | 
 
 | புகரில்கணம் எனப்பத்தும் பிறங்கு கேள்விப் | 
 
 |  | புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர்; செம்பொன் 
 | 
 
 | சிகரகிரி எனப்பணைத்துப் புடைத்து விம்மித் | 
 
 |  | திரண்டுஎழுந்து வளர்ந்துஇளகிச் செறிந்த கொங்கைத் 
 | 
 
 | தகரமலர்க் குழல்கருங்கண் குமுதச் செவ்வாய்ச் | 
 
 |  | சரிவளைக்கைக் கொடிஎன்னத் தயங்கும் மாதே!’                      
1 
 | 
 
 | மங்கலம், சொல் 
 | 
 
 | ‘மாமணிதேர் புகழ்அமுதம் எழுத்து கங்கை | 
 
 |  | மதிபரிதி களிறுபரி உலகம் சீர்நாள் 
 | 
 
 | பூமலைகார் திருகடல்நீர் பழனம் பார்சொல் | 
 
 |  | பொன்திகரி பிறவும்முதல் மொழிச்சீர்க்கு ஆகும்; 
 | 
 
 | நாமவகை யுளிசேர்தல் பொருளது இன்மை | 
 
 |  | நலம்இலதாய் வைத்தல்பல பொருளாய்த் தோன்றல் 
 | 
 
 | ஆம்இனிய சொல்ஈறு திரிதல் போலும் | 
 
 |  | ஆதிமொழிக்கு ஆகாத ஆனந் தம்மே.’                                   2 | 
 
 | 
      
 * இந்நூலின் முதல் மூன்று இயல்களும் செய்யுளியல் செய்திகளைக் கூறலின் அவை இலக்கணவிளக்கச் செய்யுளியலின் 
பிற்சேர்க்கையாகத் தரப்பட்டன. பின் இரண்டு இயல்களும் பாட்டி
யல் 
செய்திகளைக் கூறலின், இவ்வியலின் 
பிற்சேர்க்கைக்கண் இடம்பெறுகின்றன.
 
 |