436

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
 

எழுத்துப் பொருத்தமும் தானப் பொருத்தமும்
 
‘ஆனஎழுத்து ஒன்பதுஏழ் ஐந்து மூன்றாம்;
ஆகாதுஎட்டு ஆறுநான்கு ஆதிச் சீர்க்கே;
 
ஊனம்இலா அஆவும் இஈ ஐயும்
 உஊவும் எஏயும் ஒஓ ஒளவும்
 
தானம்; இதை வகையாம்அந் தாதி தன்னில்,
 தலைவன்பேர் முதல் எழுத்தில், பாலன் ஆதி
 
மேல்நிரைஎண் ணில்பால குமார ராசர்
 வேண்டிடும்;வேண் டாவிருத்தம் மரணம் தானே.’
 

3

பாலும் உண்டியும்
 
‘மருவுகுறில் ஆண்; நெடில்பெண்; அவர்இ வர்க்கா
 மயங்கினும்ஆம்; வரலாகா பேடுஒற்று ஆய்தம்;
 
உரியகச தநபமவ ஏழோடு ஆதி
 உயிர்க்குறில்நான்கு இவைஅமுதம் ஆதிச் சீர்க்கும்
 
அரியதசாங் கத்தயற்கும் நலமது ஆகும்;
 அமுதமொழிக்கு அல்லாத எழுத்தும் கால்மாத்
 
திரைஅளவுஅஃ கேனமுடன் மூன்றும் நஞ்சாய்ச்
 செப்புஎழுத்து இவைஎல்லாம் தீதாம் அன்றே.’  
 

4

வருணம்
 
 ‘தீதுஇல்உயிர் ஈராறும் முதல்ஒற்று ஆறும்
  திருமறையோர்க்கு அடைவே;ஓர் ஆறு வேந்தர்க்கு;
 
ஏதுஇல்லவ றன-கள்வணி கர்க்குஆம்; மற்றை
 எழுத்துளவை சூத்திரர்க்குஆம் இயன்ற சாதி;
 
ஓதிமன்தன் படைப்புஉயிரே; அரன்மால் செவ்வேள்
 உம்பர்கோன் பரிதிமதி மறலி நீர்க்கோன்
 
காதல்அள கேசன்முதல் இவ்வி ரண்டாய்க்
 கம்முதல்மூ வாறுஒற்றும் கருதிச் செய்தார்.’  

5