|
எழுத்துப் பொருத்தமும் தானப் பொருத்தமும்
|
| ‘ஆனஎழுத்து ஒன்பதுஏழ்
ஐந்து மூன்றாம்; |
| ஆகாதுஎட்டு ஆறுநான்கு ஆதிச்
சீர்க்கே;
|
| ஊனம்இலா அஆவும் இஈ ஐயும் |
| | உஊவும் எஏயும் ஒஓ ஒளவும்
|
| தானம்; இதை வகையாம்அந் தாதி தன்னில், |
| | தலைவன்பேர் முதல் எழுத்தில், பாலன்
ஆதி |
| |
| மேல்நிரைஎண் ணில்பால குமார ராசர் |
| | வேண்டிடும்;வேண் டாவிருத்தம் மரணம்
தானே.’ |
| |
3 |
பாலும் உண்டியும்
|
| ‘மருவுகுறில் ஆண்; நெடில்பெண்; அவர்இ வர்க்கா |
| | மயங்கினும்ஆம்; வரலாகா பேடுஒற்று
ஆய்தம்;
|
| உரியகச தநபமவ ஏழோடு ஆதி |
| | உயிர்க்குறில்நான்கு
இவைஅமுதம் ஆதிச் சீர்க்கும்
|
| அரியதசாங் கத்தயற்கும் நலமது ஆகும்; |
| | அமுதமொழிக்கு அல்லாத
எழுத்தும் கால்மாத்
|
| திரைஅளவுஅஃ கேனமுடன் மூன்றும் நஞ்சாய்ச் |
| | செப்புஎழுத்து இவைஎல்லாம்
தீதாம் அன்றே.’ |
| |
4 |
வருணம்
|
| ‘தீதுஇல்உயிர் ஈராறும் முதல்ஒற்று ஆறும் |
| | திருமறையோர்க்கு அடைவே;ஓர்
ஆறு வேந்தர்க்கு;
|
| ஏதுஇல்லவ றன-கள்வணி கர்க்குஆம்; மற்றை |
| | எழுத்துளவை சூத்திரர்க்குஆம் இயன்ற
சாதி;
|
| ஓதிமன்தன் படைப்புஉயிரே; அரன்மால் செவ்வேள் |
| | உம்பர்கோன் பரிதிமதி மறலி
நீர்க்கோன்
|
| காதல்அள கேசன்முதல் இவ்வி ரண்டாய்க் |
| | கம்முதல்மூ வாறுஒற்றும்
கருதிச் செய்தார்.’ |
|
5 |