|
நாட் பொருத்தம்
|
| ‘கருதும்உயிர் அடைவேநான்கு ஐந்து மூன்று |
| |
கார்த்திகையே பூராடம் உத்தி ராடம்;
|
|
உரைதரு க-வரியின்நான்கு இரண்டு மூன்று |
| |
மூன்றுஓணம் ஆதிரையே புனர்தம் பூசம்;
|
| இருமைகொள் ச-வரியின்நான்கு ஐந்து மூன்று |
| |
இரேவதிஅச் வனிபரணி; ஞகரம் மூன்றும்
|
| வரும்அவிட்டம்; தகரம்இரண்டு ஏழு மூன்று |
| |
வளர்சோதி விசாகமே சதயம் மன்னும்.’
|
| |
6 |
| ‘சதிதிகழ் ந-வினில்ஆறு மூன்று மூன்றும் |
| |
தருமனுடன் கேட்டையே பூரட் டாதி;
|
| திதம்மிகும்ப - வரின்நான்கு இரண்டோடு ஆறுஉத் |
| |
திரம்முதல்மூன் றாம் ; ம-வில் ஆறும் மூன்றும்
|
| இதமுடன்மூன் றும்மகம்ஆ யிலியம் பூரம்; |
| |
யா-உத்தி ரட்டாதி; யூயோ மூலம்;
|
| உதவிய வ-முதல்நான்கும் ஒழிந்த நான்கும் |
| |
உரோகணியாம் மிருகசீ ரிடம்ஆம் பேர்நாள்.’
|
| |
7 |
|
நாள், கதி
|
|
‘பேர்நாள்உற் பவநாளா தல்மூ வொன்பான் |
| |
பிரித்துஒன்று மூன்றுஐந்துஏழ் ஆகாது; எட்டாம்
|
| கூர்இராசி யும்வயினா சிகமும் ஆகா; |
| |
குறில்வன்மை ஈறுஒழிக்கில் வானோர்க்கு ஆகும்;
|
| நேர்நெடிலின் முதல்நான்குஈறு இல்லா மென்மை |
| |
நிலமக்கள் கதிமுதற்சீர்க்கு ஆகும்; ஒஓ
|
| ஏர்மருவு யரலழற விலங்காம்; மற்றை |
| |
எழுத்துநர கக்கதி; முன் இவைவா ராவால்.’ |
| |
8 |