பாட்டியல் - பிற்சேர்க்கை 1          

437



நாட் பொருத்தம்

 ‘கருதும்உயிர் அடைவேநான்கு ஐந்து மூன்று
  கார்த்திகையே பூராடம் உத்தி ராடம்;
உரைதரு க-வரியின்நான்கு இரண்டு மூன்று

  மூன்றுஓணம் ஆதிரையே புனர்தம் பூசம்;
 இருமைகொள் ச-வரியின்நான்கு ஐந்து மூன்று
   இரேவதிஅச் வனிபரணி; ஞகரம் மூன்றும்
வரும்அவிட்டம்; தகரம்இரண்டு ஏழு மூன்று
  வளர்சோதி விசாகமே சதயம் மன்னும்.’ 
 

  6

 ‘சதிதிகழ் ந-வினில்ஆறு மூன்று மூன்றும்
   தருமனுடன் கேட்டையே பூரட் டாதி;
திதம்மிகும்ப - வரின்நான்கு இரண்டோடு ஆறுஉத்
   திரம்முதல்மூன் றாம் ; ம-வில் ஆறும் மூன்றும்
இதமுடன்மூன் றும்மகம்ஆ யிலியம் பூரம்;
   யா-உத்தி ரட்டாதி; யூயோ மூலம்;
உதவிய வ-முதல்நான்கும் ஒழிந்த நான்கும்
  உரோகணியாம் மிருகசீ ரிடம்ஆம் பேர்நாள்.’   
 

 7

நாள், கதி

‘பேர்நாள்உற் பவநாளா தல்மூ வொன்பான்

  பிரித்துஒன்று மூன்றுஐந்துஏழ் ஆகாது; எட்டாம்
 கூர்இராசி யும்வயினா சிகமும் ஆகா;
  குறில்வன்மை ஈறுஒழிக்கில் வானோர்க்கு ஆகும்;
நேர்நெடிலின் முதல்நான்குஈறு இல்லா மென்மை
  நிலமக்கள் கதிமுதற்சீர்க்கு ஆகும்; ஒஓ
 ஏர்மருவு யரலழற விலங்காம்; மற்றை
   எழுத்துநர கக்கதி; முன் இவைவா ராவால்.’   
 

 8