நாட் பொருத்தம்
|
‘கருதும்உயிர் அடைவேநான்கு ஐந்து மூன்று |
|
கார்த்திகையே பூராடம் உத்தி ராடம்;
|
உரைதரு க-வரியின்நான்கு இரண்டு மூன்று |
|
மூன்றுஓணம் ஆதிரையே புனர்தம் பூசம்;
|
இருமைகொள் ச-வரியின்நான்கு ஐந்து மூன்று |
|
இரேவதிஅச் வனிபரணி; ஞகரம் மூன்றும்
|
வரும்அவிட்டம்; தகரம்இரண்டு ஏழு மூன்று |
|
வளர்சோதி விசாகமே சதயம் மன்னும்.’
|
|
6 |
‘சதிதிகழ் ந-வினில்ஆறு மூன்று மூன்றும் |
|
தருமனுடன் கேட்டையே பூரட் டாதி;
|
திதம்மிகும்ப - வரின்நான்கு இரண்டோடு ஆறுஉத் |
|
திரம்முதல்மூன் றாம் ; ம-வில் ஆறும் மூன்றும்
|
இதமுடன்மூன் றும்மகம்ஆ யிலியம் பூரம்; |
|
யா-உத்தி ரட்டாதி; யூயோ மூலம்;
|
உதவிய வ-முதல்நான்கும் ஒழிந்த நான்கும் |
|
உரோகணியாம் மிருகசீ ரிடம்ஆம் பேர்நாள்.’
|
|
7 |
நாள், கதி
|
‘பேர்நாள்உற் பவநாளா தல்மூ வொன்பான் |
|
பிரித்துஒன்று மூன்றுஐந்துஏழ் ஆகாது; எட்டாம்
|
கூர்இராசி யும்வயினா சிகமும் ஆகா; |
|
குறில்வன்மை ஈறுஒழிக்கில் வானோர்க்கு ஆகும்;
|
நேர்நெடிலின் முதல்நான்குஈறு இல்லா மென்மை |
|
நிலமக்கள் கதிமுதற்சீர்க்கு ஆகும்; ஒஓ
|
ஏர்மருவு யரலழற விலங்காம்; மற்றை |
|
எழுத்துநர கக்கதி; முன் இவைவா ராவால்.’ |
|
8 |