| புரவலனுக்குக் கேடு
 
 | 
	
		| ‘உடம்படச்செய் யான்செய்யுள் பிறர்பால் கூறில் | 
	
		|  | உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கும்; அன்றித் 
 | 
	
		| திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித் | 
	
		|  | தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத்து 
 | 
	
		| இடம்தனில்அங்கு அவன்தன்னை 
		நினைந்து சுட்டால் | 
	
		|  | ஈராறு திங்கள்தனில் இறுதி யாவன்; 
 | 
	
		| தொடர்ந்துசெயாது உளம்நொந்தால் சுற்றத்தோடும் | 
	
		|  | தொலைவன்இஃது உண்மை, அகத் தியன்தன் 
சொல்லே.’ | 
	
		| 19 | 
	
		| 
நற்கவியும் தீக்கவியும்
 | 
	
		| ‘அகத்தியன்சொல் எழுத்துமுதல் குற்றம் செய்யுட்கு | 
	
		|  | அடையாமல் தொடைகொண்டால் அடையும் செல்வம் 
 | 
	
		| மகத்துஉயர்நோய் அகலும்;அக லாது சுற்றம்; | 
	
		|  | வாழ்நாளும் அதிகம்; வழி மரபு நீடும்; 
 | 
	
		| தொகைக்குற்றம் பாட்டுஉறின்செல் வம்போம்; நோயாம்; | 
	
		|  | சுற்றம்அறும்; மரணம்உறும்; சோரும் காலும்; 
 | 
	
		| சகத்தவர்க்குஈது அன்றியே தேவர்க்கு ஆகில் | 
	
		|  | தப்பாதுஇப் பலன்கவிதை சாற்றி னார்க்கே.’ | 
	
		|  20 |