உரியதேவர்க்கு நூறு அந்தணர்க்குத் தொண்ணூறு
உடன்ஐந்தும் அரசருக்கே
உற்றிடும் தொண்ணூறு வணிகருக்கு ஐம்பான்
உரைசதுர்த்தருக்கு முப்பான்
ஓதுவர் கலம்பகத்துக்கு4 உரியதாம்; அகரம்முதல்
உறும் எழுத்துக்கள் தம்மில்
உயிர்முதல் மொழிக்கு உரிய அக்கரத்து ஆதியாய்
உயர்காரிகைத் துறையினால்
நெறிசுரிக்குழல் மாதர் காட்சிமுதலாய்க் கூறின்
நிலை வருக்கக் கோவை5 யாம்;
நேரும் ஆசிரியமும் வெண்பாவும் நேரசை
நிரையசை எழுத்தும் எண்ணி
நீள்கலித்துறையுடன் முப்பது அந்தாதியின்
நெறிபெறத் தொடையதாக
நிலைபெற உரைப்பதே மும்மணிக் கோவை6 யாய்
நீள்நிலத்து உரைசெய்வரே.’
7
அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள்
‘இருவகைப் பட்டமுற்பொருளுடன் பன்னான்கு
எனும்கருப் பொருள்களோடு
ஈரைந்து உரிப்பொருள் பொருந்து கைக்கிளைஆதி
இயைவுற்ற அன்புடைத்தாய்ப்
பெருகுகாமப் பகுதியாம்கள வொழுக்கமும்
பெண்கற்பு ஒழுக்கத்தினும்
பேதம்அன்றிக் கட்டளைக் கலித்துறையினைப்
பெறும்ஓர் நானூற்றால்திணை
|