5. அரசன் விருத்தம் :
பத்துக் கலித்துறையும்
முப்பது விருத்தமும் கலித்தாழிசையுமாக மலை
கடல் நாட்டு வருணனையும், நில வருணனையும், வாள்மங்கலமும்,
தோள்மங்கலமும் பாடி முடிப்பது. இது முடிபுனைந்த வேந்தற்கு ஆம்.
6. அலங்கார பஞ்சகம் :
வெண்பா, கலித்துறை,
அகவல், ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம்
இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுள் அந்தாதித்துப்
பாடுவது.
7.ஆற்றுப்படை :
அகவற்பாவால், விறலி,
பாணர், கூத்தர், பொருநர் இந்நால்வருள்
ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரிசுபெற்று வருவார்
ஆற்றிடைக்கண்டு
தலைவன் கீர்த்தியும் கொடையும் கொற்றமும் சொல்வது.
8. இணைமணிமாலை :
வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக
இரண்டிரண்டாக
இணைத்து, வெண்பா அகவல் இணைமணி மாலை, வெண்பாக் கலித்துறை
இணைமணிமாலை என நூறு
நூறு அந்தாதித்தொடை நான்காலும் பாடுவது.
9. இயன்மொழி வாழ்த்து : இக்குடிப் பிறந்தோர்க்கு
எல்லாம் இக்குணம் இயல்பு என்றும், அவற்றை
நீயும் இயல்பாக உடையை என்றும் இன்னோர்போல
நீயும் இயல்பாக ஈ
என்றும் உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகக் கூறுவது.
|