35. கேசாதி பாதம் :
கலி வெண்பாவால் முடி முதல் அடி அளவும் கூறுவது.
36. கைக்கிளை :
ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் கூறுவது, அன்றி.
வெண்பா
முப்பத்திரண்டு செய்யுளால்
கூறுவதும் ஆம்.
37. கையறு நிலை :
கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப் பொருள்
எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித்
தாம் இறந்து படாது ஒழிந்த
ஆயத்தாரும்பரிசில் பெறும் விறலியரும்
தனிப்படர் உழந்த செயலறு
நிலையைக்
கூறுவது.
38. சதகம் :
அகப்பொருள் ஒன்றன் மேலாதல், புறப்பொருள் ஒன்றன் மேலாதல்
கற்பித்து நூறு செய்யுள்
கூறுவது.
39. சாதகம் :
திதிநிலை, வாரநிலை, நாள்மீன்நிலை, யோகநிலை, கரணநிலை,
ஓரைநிலை,
கிரகநிலை, இவ்வேழ்வகை
உறுப்புக்கள் நிலையையும் சோதிட
நூலால் நன்குஉணர்ந்து அவற்றை அமைத்து அவற்றால் தலைவற்கு
உறுவன
கூறுவது.
மற்றும் யுகாதியாண்டு முதலியனவும் கொள்க.
40. சின்னப்பூ :
நேரிசை வெண்பாவால்
அரசனது சின்னமாகிய தசாங்கத்தினைச்
சிறப்பித்து விரித்துநூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது,
முப்பது
என்னும்எண்படக் கூறுவது.
|