41. செருக்களவஞ்சி :
போர்க்களத்திலே அட்ட மனிதர் உடலையும், யானை குதிரை
உடலையும் பேயும் பிசாசும் கழுகும்
பருந்தும் காகமும் தின்று களித்து
ஆரவாரமாய்இருக்க, பூதமும் பேயும் பாடி ஆட இங்ஙனம் இருந்த
சிறப்புப்
பாடுவது. இதையே பறந்தலைச் சிறப்புப் பாட்டும் என்ப.
42. செவியறிவுறூஉ :
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடன் என
அவையடக்கியற் பொருளுற வெண்பா
முதலும் ஆசிரியம்
43. தசாங்கத்தயல் :
அரசன் தசாங்கத்தினை ஆசிரிய விருத்தம் பத்தினால் பாடுவது.
44. தசாங்கப் பத்து :
நேரிசை வெண்பாவால் அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச்
செய்யுளால் கூறுவது.
45. தண்டகமாலை :
வெண்பாவால் முந்நூறு செய்யுள் கூறுவது. இது வெண் புகழ்ச்சி
மாலை எனவும் படும்.
46. தாண்டகம் :
இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும்
குருவும்
லகுவும் ஒத்து வந்தன
அளவியல் தாண்டகம் எனவும்,
எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு
ஒவ்வாதும் வந்தன அளவழித்
தாண்டகம்எனவும் வரும்.
|