47. தாரகை மாலை :
அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு உள்ள இயற்கைக் குணங்களை
வகுப்பால் கூறுவது. தூசிப்படையின்
அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும்
உளர்.
48. தானை மாலை : அகவலோசையில் பிறழாது ஆசிரியப்பாவான் முன்னர் எடுத்துச்
செல்லும்
கொடிப்படையைக் கூறுவது.
49. தும்பை மாலை :
மாற்றாரோடு தும்பைப்பூ மாலை சூடிப் பொருவதைக் கூறுவது
50. துயிலெடை நிலை :
தன் வலியால் பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற
அரசற்கு நல்ல புகழினைக்
கொடுத்தலைக் கருதிய சூதர் துயிலெடுப்புதலாகப்
பாடுவது.
51. தூது :
ஆண்பாலாரும் பெண்பாலாரும் அவரவர் காதற்பாணன் முதலிய
உயர்திணையோடும் கிள்ளை முதலிய
அஃறிணையோடும் சொல்லித்
‘தூதுபோய்
வா’ எனக் கலிவெண்பாவால் கூறுவது.
52. தொகைநிலைச் செய்யுள் :
நெடிலடிச் செய்யுளால் தொகுத்தது நெடுந்தொகையும், குறளடிச்
செய்யுளால்
தொகுத்தது குறுந்தொகையும்
கலிப்பாவால்
தொகுத்ததுகலித்தொகையும் போல்வன.
53. நயனப்பத்து :
கண்ணினைப் பத்துச் செய்யுளால் கூறுவது.
|