பாட்டியல் - பிற்சேர்க்கை 4

495


78.  மங்கலவள்ளை :

உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா ஒன்பதாலும் வகுப்பு
 ஒன்பதாலும் பாடுவது.

79.  மணிமாலை :

எப்பொருள்மேலும் வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவி
 வருவது.

80.  முதுகாஞ்சி :

இளமை கழிந்து அறிவு மிக்கோர் இளமை கழியாத அறிவில்
மாக்கட்குக் கூறுவதாம்.

81.  மும்மணிக்கோவை :

ஆசிரியப்பாவும், வெண்பாவும், நேரசையும் நிரையசையும் கொண்டு
 எழுத்தெண்ணிப் பாடப்படும் கலித்துறையும் முறையே தொகை முப்பது
 பெறஅடுக்கிய அந்தாதித் தொடையால் பாடுவது  

82.  மும்மணிமாலை :

வெண்பாவும் கலித்துறையும் அகவலும் அந்தாதித் தொடையால்
முப்பது பாடுவது. 

83.  மெய்க்கீர்த்திமாலை :
 
     சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்த
 கீர்த்தியைக் கூறுவது. 

84.  வசந்தமாலை : 

தென்றலை வருணித்துப் பாடுவது.