என்னும் பெருவிருப் புடையவர்கள் ஆவர். அத்தகைய ஆர்வத்தின் வழிவரும் இந்நூலை அறிஞர் உலகம் ஏற்றுப் போற்றி மகிழும் என்பது ஒருதலை. பேரன்பினராய திரு. வ. சுப்பையாபிள்ளை அவர்களுக்கு என் உளங்கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூல் வெளியிடும்பொழுது மெய்வருத்தம் பாராது படியெடுத்துக் கொடுத்த அன்பரிருவர். ஒருவர் புலவர் திரு. மு. பரசுராமன் என்பார். மற்றையவர் திரு. ந. செல்வமூர்த்தி என்பார். இவர்கள் இருவருக்கும் செந்திலாண்டவன் திருவருள் பாலிக்க வேண்டுகின்றேன்.
 

  ‘‘கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.’’
 

திருச்சிற்றம்பலம்