தேனறாமகிழ்த்தொடையலுமௌலியுந்
திருக்கிளர்குழைக்காதுங்
கானறாமலர்த்திருமுகச்சோதியுங்
கயிரவத்துவர்வாயு
மோனமாகியவடிவமுமார்பமு
முத்திரைத்திருக்கையு
ஞானதேசிகன்சரணதாமரையுமென்
னயனம்விட்டகலவே.
| (1) |
| |
பூமாதுமன்னும்புகழ்க்குருகூர்வாழ்புலவர்
கோமானியற்பெயராற்கூறுமணிப்
- பாமாலைக்
காரணனாஞ்செஞ்சொலலங்காரன்சோலைமலைக் காரணனாநாரணனேகாப்பு.
| (2) |
| |
ஆக்கமுறக்காக்கபுகழ்மாறனலங்காரத்தைப்
பூக்கமலத்தாண்மெய்புளகமெழ
- நோக்குங்
குழகனெழிற்சோலைமலைக்கொற்றவனாஞ்சங்கத் தழகனருண்மாலலங்காரன்.
| (3) |
| |
அழுக்காறிலராயழுக்கறுக்குங்கல்வி
யொழுக்காருலகத்துளரா-லிழுக்கிலா
முற்பனுவல்கண்டுரைத்தேன்மொய்யிழாய்புன்மொழியு நற்பனுவலாமெனவேநான்.
| (4) |
| |
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்-தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க வேண்டுமேயீங்கிதற்குமேல்.
| (5) |