முகப்புதொடக்கம்
  

8. உபயநாகபெந்தம்

484,485-ஆம்பக்கங்களிலுள்ளது.

-------

(இதன் விவரணம் மறுபக்கம் பார்க்க.)

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே--யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை.
அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா--துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை.

இவ் விரண்டுபாட்டும், இரண்டுநாகங்களின் தலைநின்றுதொடங்கி வான்முனைகளிறுதியாக இடையிடையே தத்தம்முடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாடி முடியுமாறு காண்க.

---------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்