முகப்புதொடக்கம்
  

16. கடகபெந்தம்.

503-ஆம்பக்கத்திலுள்ளது.

---------

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே--நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.

இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி, மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று, அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமேகூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க.

----------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்