முகப்பு |
உறையூர் முதுகூத்தனார் |
353. குறிஞ்சி |
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக, |
||
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, |
||
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; |
||
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில், |
||
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல் |
||
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ, |
||
அன்னை முயங்கத் துயில் இன்னாதே. |
உரை | |
பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது கவல் அறிந்து, பின்னும் 'பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்', என்று, ப |
371. குறிஞ்சி |
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும், |
||
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி |
||
அருவியின் விளைக்கும் நாடனொடு, |
||
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே. |
உரை | |
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன் |