முகப்பு |
உறையூர் முதுகொற்றன் |
221. முல்லை |
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன; |
||
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, |
||
பாலொடு வந்து கூழொடு பெயரும் |
||
ஆடுடை இடைமகன் சென்னிச் |
||
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. |
உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன் |
390. பாலை |
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்- |
||
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!- |
||
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, |
||
வளை அணி நெடு வேல் ஏந்தி, |
||
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே. |
உரை | |
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன் |