முகப்பு |
கருவூர்க் கதப்பிள்ளை |
64. முல்லை |
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, |
||
புன் தலை மன்றம் நோக்கி, மாலை |
||
மடக் கண் குழவி அலம்வந்தன்ன |
||
நோயேம் ஆகுதல் அறிந்தும், |
||
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை |
265. குறிஞ்சி |
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
||
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
||
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
||
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
||
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
||
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
||
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
||
தான் நாணினன், இஃது ஆகாவாறே. |
உரை | |
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |
380. பாலை |
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் |
||
வென்று எறி முரசின் நன் பல முழங்கி, |
||
பெயல் ஆனாதே, வானம்; காதலர் |
||
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே; |
||
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய |
||
வண்ணத் துய்மலர் உதிர |
||
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே! |
உரை | |
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற |