முகப்பு |
கோவர்த்தன் |
66. முல்லை |
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- |
||
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய |
||
பருவம் வாராஅளவை, நெரிதரக் |
||
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, |
||
வம்ப மாரியைக் கார் என மதித்தே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார் |
194. முல்லை |
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர |
||
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் |
||
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; |
||
ஏதில கலந்த இரண்டற்கு என் |
||
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார். |