முகப்பு |
நரிவெரூஉத்தலையார் |
5. நெய்தல் |
அதுகொல், தோழி! காம நோயே?- |
||
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, |
||
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், |
||
மெல்லம் புலம்பன் பிரிந்தென, |
||
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார் |
236. நெய்தல் |
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ |
||
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!- |
||
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை |
||
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை |
||
வம்ப நாரை சேக்கும் |
||
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார். |