முகப்பு |
படுமரத்து மோசிகீரனார் |
33. மருதம் |
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்; |
||
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? |
||
இரந்தூண் நிரம்பா மேனியொடு |
||
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. |
உரை | |
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன் |
75. மருதம் |
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- |
||
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! |
||
வெண் கோட்டு யானை சோணை படியும் |
||
பொன் மலி பாடலி பெறீஇயர்!- |
||
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? |
உரை | |
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார் |
383. பாலை |
நீ உடம்படுதலின், யான் தர, வந்து, |
||
குறி நின்றனனே, குன்ற நாடன்; |
||
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி; |
||
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத் |
||
தீ உறு தளிரின் நடுங்கி, |
||
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே. |
உரை | |
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன் |