முகப்பு |
பூங்கணுத்திரையார் |
48. பாலை |
'தாதின் செய்த தண் பனிப் பாவை |
||
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என, |
||
ஓரை ஆயம் கூறக் கேட்டும், |
||
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் |
||
நன்னுதல் பசலை நீங்க, அன்ன |
||
நசை ஆகு பண்பின் ஒரு சொல் |
||
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே? |
உரை | |
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார் |
171. மருதம் |
காண் இனி வாழி-தோழி-யாணர்க் |
||
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட |
||
மீன் வலை மாப் பட்டாஅங்கு, |
||
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே? |
உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார் |