பூங்கணுத்திரையார்

48. பாலை
'தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

உரை

பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார்

171. மருதம்
காண் இனி வாழி-தோழி-யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டாஅங்கு,
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே?

உரை

வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார்